Friday, November 18, 2011

வாமதேவ ஆசனம், ஸ்வஸ்திகா ஆசனம், ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்.

வாமதேவ ஆசனம்.
வாமதேவ ஆசனம்

செய்முறை:

வஜ்ராசனநிலையில் அமரவும். இடுப்பை இடப்பக்கமாக கீழே சரிந்து உட்கார்ந்து, மேலிருக்கும் வலதுகாலை, அப்படியே பின்னால் கொண்டு போங்கள். அதாவது, பிருஷ்டபாகம் முழுவதுமாக பின்னால் போகவேண்டும். இடது முழங்காலை தொடையோடு ஒட்டியிருக்குமாறு மடியுங்கள். அடுத்தபடியாக இரண்டு கால் விரல்களையும், கரங்களின் உதவியோடு ஒன்றிணையுங்கள் அடுத்த படியாக, இதுபோல் பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டு பிடிப்பு, கால்பாத வலி, குதிகால் வலி மற்றும் முழங்கால் மூட்டு வீக்கம் மறையும். திருமணமான பெண்களுக்கு இடை, தொடையில் அதிக சதை போட்டு பிருஷ்டங்கள் பெரிதாகும். தினந்தோறும் வாமதேவ ஆசனம் செய்துவந்தால், `மெலிய வேண்டிய' அத்தனை உறுப்புகளும் மெலிந்து உடம்பு சிக் அழகோடு திகழும். பருவ பெண்களுக்கு யானையின் துதிக்கை போல, வாளிப்பான கால்கள் அமையும்.


ஸ்வஸ்திகா ஆசனம்.
ஸ்வஸ்திகா ஆசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். வலதுகாலை மடக்கி, இடது முழங்கால் பின்புறசந்தில் வையுங்கள். வலது முழங்கால் பின்புற சந்தில், இடது கால் மடங்கிய நிலையில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் முழங்காலின் மேல், மாற்றி வைத்து நிமிர்ந்து உட்காரவேண்டும்.

பயன்கள்:

முழங்கால்-மூட்டுவலி நீங்கும். இடுப்பு எடை, அடித்தொடை சதை குறையும். இது தியான ஆசனங்களில், குறிப்பிடத்தக்க ஒன்று!


ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்.
ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலதுகாலை மட்டும் செங்குத்தாக முன்னோக்கி நீட்டவும். அப்போது உங்களின் இரு கைகளும், வலது உள்ளங்காலை மேவியநிலையில், கும்பிட்டபடி இருக்கட்டும். இந்த நிலையில் மூச்சு இயல்பாக இருக்க வேண்டும். ஆசனத்தை கலைத்து இயல்பு நிலைக்கு வாருங்கள். அடுத்த படியாக, இடதுகாலை மாற்றி போட்டு, முன்புபோல ஆசனத்தை செய்யவும்.

பயன்கள்:

கால் சம்பந்தமான நோய்கள் வராது. இடுப்பு, தொடை எடை குறையும். குதிகால் வெடிப்பு, பாதவலி இருந்தால் பறந்துபோகும். யானைக்கால் வியாதியை தடுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!

No comments: