Saturday, September 17, 2011

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி: திட்ட கமிஷன் சொல்கிறது

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி. இது நியாயமானது என்று கருதுகிறேன்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான நம்பகத்தன்மையை இது அதிகரிக்கும். இதனால் முதலீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

பெட்ரோலிய பொருட்களின் விலை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டையே நாங்கள் பின்பற்றுகிறோம்
என்று கூறியுள்ளார்.

1 comment:

பனித்துளி சங்கர் said...

இது நடுத்தர மக்களுக்கு பாதிப்பைத் தரும் என்றாலும் இந்தியாவின் பொதுவில் பார்க்கும்பொழுது ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றுதான்