Thursday, August 18, 2011

சரவணா ஸ்டோர்ஸில் ஐடி ரெய்டு : 50 அதிகாரிகள் சோதனை.



சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி. நகர் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 6 கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 50 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த திடீர் சோதனையால் கடைகள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: