Wednesday, July 20, 2011

மதுரையில் பிரபல சினிமா பைனான்ஷியர் அன்பு கைது.


பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.

பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்ததன் மூலம் இவர் திரைத்துறையில் மிக பிரபலமாக இருந்து வந்தார்.

திரைப்படத் தயாரிப்பில், தயாரிப்பாளர்களின் நெருக்கடியான சூழ்நிலைக்கு எந்த நேரத்தில் எவ்வளவு பணம் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் ஆற்றலுடன் கொடிகட்டிப் பறந்தவர்.

திரைப்படத் தயாரிப்பிற்கான நிதிஉதவி என்றாலே வட்டி அதிகம். ஆனால் இவரிடம் வட்டி இன்னும் அதிகம். அதேபோல் வசூலில் இவரது கெடுபிடிகள் கொடூரமானது.
.
பிரபல இயக்குநர் மணிரத்னம் அண்ணன் ஜி.வி. தற்கொலைக்கு இவரே மூலகாரணம். இவரிடம் பெற்ற கடனுக்காக அதைவிட பன்மடங்கு வட்டி செலுத்தியபோதும் அசல் அடைபடாமல் இருந்தது ஒருபுறமும், இன்னொருபுறம் இவரது கொடூரமான கெடுபிடிகள் தந்த மன உளைச்சலின் விளைவே மேற்கண்ட தற்கொலை முடிவிற்கான காரணமாக அமைந்தது.

25இலட்சரூபாயே ஜி.வி.யை தற்கொலையின் விளிம்பிற்குத் தள்ளியது.

நான் கடவுள் படத்தில் இருந்து நடிகர் அஜீத் விலகியபோது, அவரை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துவந்து, இவரால் கொடூரமாக மிரட்டப்பட்டிருக்கிறார். மரணபயம் அவருக்குக் காட்டப்பட, கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதிருக்கிறார் 'தல' அஜீத். இறுதியாக 3கோடிரூபாய் ஈடாக தருவதாக ஒப்புக்கொண்டபின் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொன்னமாதிரியே பயத்துடன் 3கோடிரூபாய் கொடுத்தும் இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டியதாக அவ்வப்போது இவர் மீது சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருந்தது.

காலப்போக்கில் அவரே தயாரிப்பாளர் ஆனார். பின்னர் விநியோகஸ்தருமானார். ரியல்-எஸ்டேட் துறையிலும் கால்பதித்தார்.

இந்நிலையில் நில அபரிப்பு வழக்கில் இவர், 19-07-2011 இரவு மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் நான்கு புகார்கள் உள்ளன என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

1 comment:

மதுரை சரவணன் said...

madurai kalngkuthu... ammaa pukal paravuthu... aanaa antha samachcheer kalvi thaan ... oru mainas...