Tuesday, July 12, 2011

மன்மோகன்சிங் உத்தரவுக்கு கட்டுப்படாத மந்திரி.


அசாம் மாநிலத்தில் கடந்த 10.07.2011 அன்று தீவிரவாதிகள் வைத்த வெடியில் சிக்கி கவுகாத்தி பூரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதில் 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

ரெயில் மந்திரி பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன்சிங், நேற்று ரெயில்வே இணை மந்திரி முகுல் ராயை அழைத்து விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

ஆனால், முகுல்ராய் பிரதமர் மன்மோகன்சிங்கின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்து விட்டார். விபத்து நடந்த இடத்தில் தடம் புரண்ட பெட்டிகள் தூக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்து விட்டது. காயமடைந்தவர்களும் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். எனக்கு அந்த இடத்தில் வேலை இல்லை'' என்று அவர் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பினார். இந்த தகவலை அவர் பிரதமரிடம் தெரிவித்தாரா? என்று தெரியவில்லை.

முகுல்ராய்க்கு பிரதமர் உத்தரவிட்டபோது அவர் விபத்து நடந்த மாநிலமான அசாமுக்கு அருகில் உள்ள மே.வங்காள மாநிலத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும், ரெயில் மந்திரியுமான மன்மோகன்சிங் உத்தரவை சக மந்திரி ஏற்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

No comments: