Monday, July 11, 2011

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு இல்லை : பாகிஸ்தானுக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தம் ; அமெரிக்கா நடவடிக்கை.

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு இல்லை: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தம்; அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்க அந்நாட்டுக்கு அமெரிக்கா ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதவி வழங்கி வருகிறது. ராணுவ தளவாடங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுகின்றன. எனவே, தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த ரூ.4 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அதற்கான அறிவிப்பை ஒபாமா அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகி பில்தலே டெலிவிஷனில் உறுதி செய்தார்.

அது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அமெரிக்க பயிற்சியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராணுவத்துக்கு அளிக்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

No comments: