Saturday, July 16, 2011

ஒரே நாளில் சாய்பாபா சமாதியில் 1 லட்சம் பேர் தரிசனம் : புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது.

ஒரே நாளில் சாய்பாபா சமாதியில்  1 லட்சம் பேர் தரிசனம்: புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்தவர் சத்ய சாய்பாபா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து ஆசிரமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி கட்டப்பட்டது. சாய்பாபா மரணத்திற்கு பிறகு கடந்த 3 மாதங்களாக புட்டபர்த்தி நகரம் வெறிச் சோடி காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று குரு பூர்ணிமா விழாவையொட்டி சாய்பாபா சமாதி திறக்கப்பட்டது. சமாதியை தரிசிக்க அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.அங்குள்ள லாட்ஜூக்கள், ஓட்டல்கள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.அங்குள்ள கடைகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்தது.

சமாதி திறந்த பிறகு புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியுள்ளது. இதனால் அங்குள்ள வியாபாரிகள், ஓட்டல் - லாட்ஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments: