Saturday, June 25, 2011

முதல் - அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய ராணி மேரி கல்லூரிமாணவிகள் .

முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாணவிகள்: ராணி மேரி கல்லூரி முன்பு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராணி மேரி கல்லூரி வழியாகத்தான் தினமும் தலைமைச் செயலகத்திற்கு செல்வார்.

நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக ராணி மேரி கல்லூரி முன்பு முதல்வர், பேராசிரியைகள், மாணவிகள் கூடி நின்றனர்.

அங்கு திரளாக குழுமியிருந்த மாணவிகளை பார்த்ததும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தனது டிரைவரை காரை நிறுத்தச் சொன்னார். உடனே டிரைவர் காரை நிறுத்தினார்.

அப்போது மாணவிகளும் பேராசிரியைகளும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அருகே சென்று அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து, மீண்டும் முதல்-அமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துக்களை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கல்லூரி முதல்வர், பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதோடு மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். முதல்- அமைச்சர் தங்களை வாழ்த்தியதை எண்ணி மாணவிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments: