Sunday, June 26, 2011

பேப்பர் பயன்பாட்டை குறைக்க எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் : மத்திய அரசே வழங்குகிறது.

பேப்பர் பயன்பாட்டை குறைக்க பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: மத்திய அரசே வழங்குகிறது

பாராளுமன்ற கூட்டத் தொடர்களின் போது, பாராளுமன்ற பணிகள், அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் போன்றவை காகிதத்தில் அச்சிடப்பட்டு எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகிறது. பெரிய கட்டுகளாக இவை இருப்பதால், எம்.பி.க்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், பேப்பர் செலவுகளும் அதிகமாகிறது.

பேப்பர் பயன்பாட்டை குறைத்து சீரமைக்கவும், செலவையும் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதில் எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் வாங்குவதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பம் கொண்ட இந்த கம்ப்யூட்டரில், கீ-போர்டை பயன்படுத்த தேவை இல்லை. தொடுதிரை மூலம் அன்றைய தினத்தின் கேள்விகள் பட்டியலை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். எம்.பி.க்கள் பாராளுமன்ற செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என, ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான் தெரிவித்தார். கையடக்க கம்ப்யூட்டரை இயக்க எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

No comments: