Sunday, June 26, 2011

தடுப்பு சுவரை இடித்து தனியார் பஸ் மீது மோதிய ஆம்னி பஸ் - 9 பேர் பலி.

தடுப்பு சுவரை இடித்து    தனியார் பஸ் மீது மோதிய    ஆம்னி பஸ்-9 பேர் பலி

சேலம் புதிய பஸ் நிலை யத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு 10-15 மணியளவில் ஒரு தனியார் பஸ் தர்மபுரி நோக்கி சென்றது. பண்ணப்பட்டி என்ற ஊருக்கு அருகே சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, எதிரே பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ராஜேந்திரன் என்பவர் மொபட்டில் பிரிவு ரோட்டில் இருந்து அதிவேமாக மெயின் ரோட் டிற்கு வந்தார்.

இதைப் பார்த்த ஆம்னி பஸ் டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது தனியார் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. 2 பஸ்களின் முன்பகுதியும் ஒன்றுடன் ஒன்று சிக்கி கொண்டது. இந்த பயங்கர விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த 9 உடல்களையும் போலீசார் மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை சேலம், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகள், மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். விபத்தில் இறந்த 9 பேரில் 8 பேரின் அடையாளம் தெரியவந்ததுள்ளது.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. பிஜூவில்சன் (42) கர்நாடகா பஸ் டிரைவர். கேரள மாநிலம் திருச்சூர்.
2. பாக்கியராஜ் (25), சேலம் - தர்மபுரி, தனியார் பஸ் டிரைவர். தீவட்டிப்பட்டி.
3. சின்னத்தம்பி (40) தொப்பூர்.
4. கமலக்கண்ணன் (38) தாசசமுத்திரம், தீவட்டிப்பட்டி.
5. கமல்பாட்சா (60) பெங்களூர்.
6. தில்சா பேகம். (கமல் பாட்சாவின் மனைவி)
7.சண்முகசுந்தரம் (37) தர்மபுரி,
8. ராஜா (16) கஞ்சநாயக்கன்பட்டி
9. 50 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்று தெரியவில்லை. மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டது. விபத்து பற்றி அறிந்ததும் அமைச்சர்கள் இடைப்பாடி பழனிச்சாமி, உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லி, எம்.எல்.ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், பாஸ்கரன் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

No comments: