Thursday, April 7, 2011

திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்-கோவையில் ஜெயலலிதா பேச்சு.


இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்..

கோவை கூட்டத்தில் ஜெயலலிதா மேலும் பேசியதாவது:

இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல்.

நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக்காரக் கும்பலுக்கு, குடும்ப ஆட்சிக்கு தமிழக மக்கள் என்ன தண்டனை தரப் போகிறார்கள் என்பதை நாடே உற்றுப் பார்க்கிறது.

சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி ஆகியவை தான் ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியம். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி. தொழில்கள் நலிவுற்று, விவசாயம் சீர்குலைந்து, விலைவாசி விஷம் போல ஏறி விட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், திமுக அமைச்சர்களும்தான்.

மதுரையில் தா.கிருட்டிணன் கொலை, மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு, துணைவேந்தர் மீதான தாக்குதல், அரசு அதிகாரிகளைப் பழிவாங்குதல் எனபல நடவடிக்கைகள்.

நில அபகரிப்பு, ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்.

வீரபாண்டி ஆறுமுகம், கொலைக் குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறினாரே. அப்போது அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா. ஹார்லிக்ஸ் திருட்டு குறித்து நான் புகார் கூறியது குறித்து நடவடிக்கை எடுத்தாரா.

இப்படி எதற்குமே திராணியற்ற முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார். இதற்கு அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. கருணாநிதி ஆட்சியி்ல எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகள் பெருகி விட்டன.

மின்தேவைக்கும், உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை ஆக்கியதுதான் கருணாநிதி சாதனை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அஞ்சும் நிலை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும், எப்போது நிம்மதி கிடைக்கும் என்று அனைவரும் ஏங்கும் நிலைக்கு தமிழகத்தை சீரழித்து விட்டார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சில் பாதி, அவர் ஊர் ஊராக போய் பிரசாரம் செய்யும்போது எழுதி வைத்து வாசித்ததே என்பது குறிப்பிடத்தகக்து.

1 comment:

Anonymous said...

சோ: ஏண்டிம்மா! நன்னாத்தான் பேசுற.ஆனா, ஒரே பக்கத்தையே திருப்பி,திருப்பி படிக்காதே. நான் எழுதின மத்தப் பக்கமெல்லாம் எங்கே போயிடுத்து. கொஞ்சம் அதையும் படிச்சுடு,இல்லாட்டி போரடிச்சிடும். ஓடிடுவா.