Thursday, April 7, 2011

கொடிய ஆட்சி வந்துவிடக் கூடாது: மதுரையில் கலைஞர்.


தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர், தி.மு.க.,வை வளர்க்க தானும், முன்னாள் மதுரை மேயர் முத்துவும் அரும்பாடுபட்டதாகவும், தி.மு.க.,வுக்காக பாடுபட்ட பி.டி.ஆர்., தென்னரசு, தமிழ்குடிமகன் உள்ளிட்ட பலர் இந்த மேடையில் இல்லை, ஆனால் அவர்கள் தந்துவிட்டு சென்ற உணர்வு என் உருவத்திலும், அழகிரி, பொன் முத்துராமலிங்கம் உருவில் உள்ளது என்றார்.

மேலும், பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் மதுரையில் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை பற்றி யார் குறைகூறினாலும் கவலைப்படபோவதில்லை. மக்களுக்கு ஆற்றும் பணியை திமுக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இனஉணர்வோடு தான் கொடிய ஆட்சி மலராமல் தடுக்க முடியும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது.

தி.மு.க., ஆட்சியில் மதுரை மாநகராட்சியாக மாறியது. மதுரை திண்டுக்கல் சாலையில் மேம்பாலம், மேயர் முத்து மேம்பாலம், மாநகராட்சி கட்டிடம், மதுரை சுற்றுச்சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் கக்கன் சிலை அமைக்கப்பட்டது. மதுரையில் ஐகோர்ட் கிளை ஏற்படுத்தப்பட்டதும் தி.மு.க., ஆட்சியில் தான்.

பதிலுக்கு பதில், தாக்குதலுக்கு தாக்குதல் போன்ற பழக்கம் எனக்கு இல்லை. ‌செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதா என் மீது குற்றம் சாட்டுகிறார். நம்மை தள்ளிவிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிசெய்கிறார். சென்னை கூட்டத்தில் நதிநீர் பிரச்னை, தமிழை மத்திய ஆட்சி மெட்ழி, முல்லை பெரியாறு பிரச்னை, சேது சமுத்திர திட்டம் போன்று ‌மக்களுக்கு தேவையான திட்டங்களை சோனியாவிடம் கேட்டேன்.

உங்களுக்காக நான் இருப்பவன். பாடுபடுபவன். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பெரும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். கொடிய ஆட்சியை தடுத்து நல்லாட்சி தொடர முடியும் என்றார்.

No comments: