Tuesday, April 19, 2011

சிரியாவில் கலவரத்தை தூண்ட அமெரிக்கா நிதி உதவி செய்தது “விக்கி லீக்” அம்பலம்.

சிரியாவில் கலவரத்தை தூண்ட அமெரிக்கா நிதி உதவி செய்தது     “விக்கி லீக்” அம்பலம்

அரபு நாடான சிரியாவில் அதிபர் பாஷார் அல்- ஆஷாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கிய போராட்டம் தற்போது வலுவடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

அதில் 8 பேர் பலியானார்கள். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பெய்ரூட் நகரின் மையத்தில் உள்ள சதுக்கத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பாஷார் அல்-ஆஷாத் பதவி விலகும் வரை அங்கிருந்து கலைய மாட்டோம் என கூறி சதுக்கத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனால் அங்கு போராட்டம் வலுவடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு போராட்டம் நடக்க அமெரிக்காவே காரணம் என விக்கி லீக் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரங்களின் ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக் இணையதளம் சமீபத்தில் சிரியா குறித்த தகவல்களை கசிய விட்டது.

அதில், சிரியாவில் கலவரத்தை தூண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பண உதவி செய்தார். அத்துடன் அதி பருக்கு எதிரான பிரசா ரத்தை ஒளிபரப்ப லண் டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு தனியார் டெலிவிஷனுக்கும், அவரது அரசு பண உதவி அளித்தது.

அதற்காக இருதரப் பினருக்கும் மொத்தம் ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த தனியார் டி.வி. சிரியாவில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. அதன் எதிரொலியாகதான் தற்போது அங்கு கலவரம் உச்சக்கட்டத்தை எட்டி யுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கும், சிரியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே கடந்த 2005-ம் ஆண்டு டமாஸ்கஸ்சில் ஏற்பட்டது.

அவரது ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. ஒருபுறம் கலவரத்தை தூண்டிக் கொண்டே மறுபுறம் சிரியாவுடன் ஆன உறவை பலப்படுத்துவது போன்று அமெரிக்கா நடிக்கிறது. கடந்த 6 வருடத்தில் கடந்த ஜனவரி மாதம்தான் முதன் முதலாக சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா நியமித்தது.

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.


No comments: