கோடை விடுமுறைக்காக மீனாட்சி, பல்லடம் மூலப்பாதையில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த மீனாட்சி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது மீனாட்சியின் 2 மார்பகங்களையும் யாரோ மர்ம மனிதர்கள் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து எடுத்துச் சென்று விட்டனர். இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தர விட்டார். பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் 3 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர்கள் தவமணி (பல்லடம்), சுந்தரமூர்த்தி (காமநாயக்கன் பாளையம்), ரமேஷ் (மங்கலம்) ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
அப்போது மீனாட்சியின் 2 மார்பகங்களையும் யாரோ மர்ம மனிதர்கள் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து எடுத்துச் சென்று விட்டனர். இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தர விட்டார். பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் 3 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர்கள் தவமணி (பல்லடம்), சுந்தரமூர்த்தி (காமநாயக்கன் பாளையம்), ரமேஷ் (மங்கலம்) ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
பல்லடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள், பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் என 60 பேரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் மாணவியின் மார்பகங்களை அறுத்து எடுத்து கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள பூலுவப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் மீனாட்சி (வயது 18). குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
1 comment:
bloody ideats """"" cut tham'
Post a Comment