Sunday, October 9, 2011

பத்த பத்மாசனம், கர்ப்பாசனம், வாமதேவ ஆசனம்.

பத்த பத்மாசனம்.
பத்த பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு போங்கள். உங்களின் வலது கை, இடது கை கட்டை விரலை பிடித்திருக்கட்டும். இடது கையால், வலது கை கட்டை விரலை பிடியுங்கள். நேராக நிமிர்ந்து உட்காரவும்.

இரண்டு `பிடி'களையும் மெல்ல இறுக்குங்கள். குறைந்தது 15 விநாடிகள் இருந்து பின்பு பழைய நிலைக்கு வரவும். அடுத்தபடியாக, இதே போல, காலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

செரிமான கோளாறு அகலும். நுரையீரல், இதயம் நன்கு இயங்கும். ஆஸ்துமா நோய் தீரும். அகன்ற மார்பு கிட்டும். நுரையீரல்- மார்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். மார்பு சிறியதாக இருப்பதாக கருதும் பெண்கள் இவ்வாசனத்தை செய்துவந்தால் கவர்ச்சியான மார்பகத்தை பெறலாம். `ஈர்க்கு இடை போகா இளமுலை' என்கிற இலக்கண முறைப்படி வனப்பான, செழிப்பான மார்பகம் உறுதிப்படும்.


கர்ப்பாசனம்.
கர்ப்பாசனம்

செய்முறை:

இடதுதொடை - வலது தொடை இடைவெளியில், முறையே இடது, வலது முழங்கையை செலுத்துங்கள். அப்படியே கைகளை மடக்கி, சற்று குனிந்து காதுகளை தொடுங்கள். இந்த நிலையில் உடல் புட்டபாகத்தின் அடிப்பகுதியை, ஃ எழுத்து போல சமநிலையில் நிறுத்த வேண்டியிருக்கும்.

பயன்கள்:

உடம்பின் அத்தனை நாளமில்லா சுரப்பிகளையும் இயக்குகிற ஆற்றல், கர்ப்பாசனத்துக்கு உண்டு. பிட்யூட்டரி சுரப்பி நன்கு இயங்குவதால் கல்வியறிவு- ஞானத்தை கைவரப்பெறுவீர்கள். சகல நோய்களும் நீங்கும். தீய எண்ணங்கள், கோபம், அதிக காமம் கட்டுப்படுவதோடு, மனசும் பக்கவப்படும்.


வாமதேவ ஆசனம்.
வாமதேவ ஆசனம்

செய்முறை:

வஜ்ராசனநிலையில் அமரவும். இடுப்பை இடப்பக்கமாக கீழே சரிந்து உட்கார்ந்து, மேலிருக்கும் வலதுகாலை, அப்படியே பின்னால் கொண்டு போங்கள். அதாவது, பிருஷ்டபாகம் முழுவதுமாக பின்னால் போகவேண்டும். இடது முழங்காலை தொடையோடு ஒட்டியிருக்குமாறு மடியுங்கள். அடுத்தபடியாக இரண்டு கால் விரல்களையும், கரங்களின் உதவியோடு ஒன்றிணையுங்கள் அடுத்த படியாக, இதுபோல் பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டு பிடிப்பு, கால்பாத வலி, குதிகால் வலி மற்றும் முழங்கால் மூட்டு வீக்கம் மறையும். திருமணமான பெண்களுக்கு இடை, தொடையில் அதிக சதை போட்டு பிருஷ்டங்கள் பெரிதாகும். தினந்தோறும் வாமதேவ ஆசனம் செய்துவந்தால், `மெலிய வேண்டிய' அத்தனை உறுப்புகளும் மெலிந்து உடம்பு சிக் அழகோடு திகழும். பருவ பெண்களுக்கு யானையின் துதிக்கை போல, வாளிப்பான கால்கள் அமையும்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

Sabapathy Anbuganesan said...

/உங்களின் வலது கை, வலது கட்டை விரலை பிடித்திருக்கட்டும். இடது கையால், இடது கட்டைவிரலை பிடியுங்கள்./
How is this possible?
Please made necessary correction about this posture.