Tuesday, October 25, 2011

சத்தமில்லாமல் விருதுகள் வாங்கிக் குவிக்கும் இசைப்புயல். ஏ. ஆர். ரகுமான்.



பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு 127 அவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது

127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரகுமானின் பெயர் மறுபடியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரகுமானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது வழங்கப்பட்டது.

127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரகுமான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு.,

2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன.

2009 ஆம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் இசைப்புயல் ரகுமான்.

பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் தமது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று உச்சரித்து, தமிழருக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகளும் பெற்றுள்ளார்.

2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு உலக சவுண்டு டிராக் அகாடமி விருதினையும் தனதாக்கினார் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது,

தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ,

ஆறு முறை தமிழக திரைப்பட விருது,

13 முறை பிலிம்பேர் விருது,

12 முறை பிலிம்பேர் சவுத் விருது, 9 முறை தொடர்ந்து பெற்றார்.

ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருதுகளையும் பெற்ற ஏ. ஆர். ரகுமான் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்.

வாழ்க ரகுமான் என்று வாழ்த்துவோம்.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்