Thursday, July 14, 2011

பொறியியல் சேர்க்கையில் மாணவர்களின் 2ஆவது விருப்பம் - மெக்கானிக்கல் பிரிவு !



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில், முதல் இடமாக மாணவர்கள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவை தேர்ந்து எடுக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, போட்டி போட்டுக்கொண்டு மெக்கானிக்கல் பிரிவை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 38 ஆயிரம் இடங்களுக்கு (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவ - மாணவிகளை பி.இ. சேர்த்து வருகிறது.

ஊனமுற்றோர் கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு, தொழில்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகியவை முடிந்து விட்டன.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொது கலந்தாய்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. கடந்த பல வருடங்களாக மாணவ - மாணவிகள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் - இ.சி.இ. பிரிவை தான் முதலில் விரும்பி எடுக்கிறார்கள்.

கணினி அறிவியல் பிரிவுக்கு கடந்த சில வருடங்களாக அதிக வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதால் மீண்டும் கணினி அறிவியல் பிரிவை எடுப்பதிலும் ஆர்வம் சற்று அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக மெக்கானிக்கல் பிரிவு 4 அல்லது 5ஆவது இடத்தில்தான் இருந்தது. ஆனால் இந்த வருடம் இ.சி.இ.க்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவைதான் விரும்பி எடுக்கிறார்கள்.

ஜூலை 11இன் படி நிலவரப்படி மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 336 இடங்களில் 8 ஆயிரத்து 294 இடங்களை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர்.

இதில் இ.சி.இ. பிரிவை 2 ஆயிரத்து 118 பேர்களும், மெக்கானிக்கல் பிரிவை 1387 பேர்களும் எடுத்துள்ளனர். 3ஆவதாக 1271 பேர் கணினி அறிவியல் பிரிவை தேர்ந்து எடுத்துள்ளனர்.

4ஆவதாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவை 909 பேர் எடுத்துள்ளனர். 5ஆவது இடத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளது. அதாவது அந்த பிரிவை 701 பேர் தேர்வு செய்தனர்.

சிவில் பிரிவை 487 பேர்களும், ஆட்டோமொபைல் பிரிவை 99 பேர்களும், ஏரோனாட்டிக்கல் பிரிவை 84 பேர்களும் எடுத்துள்ளனர். தமிழ்வழியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவை ஒரு மாணவரும், தமிழ்வழியில் சிவில் பிரிவை 2 பேரும் எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த வருடம் மாணவ-மாணவிகளிடையே மெக்கானிக்கல் பிரிவை எடுக்கும் மோகம் அதிகரித்துள்ளது.

1 comment:

ரா: அரசகுமாரன் said...

Nice Blog..
Please Read this also http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html