Wednesday, June 29, 2011

டீசல், கேஸ் விலையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை ! - பிரணாப்.

பெட்ரோல், டீஸல் விலையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

வாஷிங்டன் நகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், "டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே நாங்கள் கச்சா எண்ணை இறக்குமதி மீதான சுங்க வரியை குறைத்து இருக்கிறோம். இதனால் ஆண்டு ஒன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ.49 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு மேல் தியாகம் செய்ய இயலாது.

மாநில அரசுகள் டீசல், கியாஸ் விலையை குறைக்க வரியை சற்று குறைக்கலாம். இதற்காக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் குறைத்தும் உள்ளன," என்றார்.

No comments: