Thursday, January 12, 2012

தேவிகுளம், பீர்மேட்டை கேரளாவிலிருந்து மீட்க வேண்டும் - கருணாநிதி அதிரடி.



தமிழர்களுக்குச் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை மீட்டு தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதிகளை முறைகேடாக கேரளத்துடன் இணைத்தது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதை வரலாற்று சான்றுகளுடன் விவரித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமான இடமாகும். தமிழர்களின் இடம் இவை. 1886ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமே பிழையானது.

தமிழர்களுக்குச் சொந்தமான இடத்தை கேரளாவுடன் இணைத்தது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இப்போதாவது வரலாற்றை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகத்துடன் இணைக்க தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

1 comment:

Hariharan Valady said...

DMK is part of ruling UPA. Why can't he impress on the Congress or quit fro the govt? After all for DMK people, position is like a "towell" whereas principle is like "dhoti".