Friday, December 9, 2011

பரஞ்சோதி நீக்கம் : தமிழக அமைச்சரவை மாற்றியமைப்பு.



இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து பரஞ்சோதி நீக்கபட்டார்.

அத்துடன், முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

அமைச்சர் பொறுப்பில் இருந்து பரஞ்சோதி நீக்கப்பட்ட நிலையில், சமூக நலத்துறை பொறுப்பில் இருந்து செல்வி ராமஜெயம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன், பா.வளர்மதி ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை பொறுப்பு, பா.வளர்மதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சட்டம், நீதித்துறை மற்றும் சிறைத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதிக்கு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை வழங்கப்பட்டது.

பரஞ்சோதி மீது, 'சட்டப்படி திருமணம் செய்து வாழ மறுத்தல், கொலை மிரட்டல்’ உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவத்தின் எதிரொலியால், அவர் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

No comments: