Tuesday, December 27, 2011

முல்லை பெரியாறு அணை : தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு.

முல்லை பெரியாறு அணை: தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கங் களால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என கேரளா வற்புறுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட ஒரு அவசர கால குழுவை கடந்த 12-ம் தேதி அமைத்தது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்கு தமிழக எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகம் வந்த பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த குழுவை நிறுத்தி வைக்க கோரியிருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, தமது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்திடம் வழங்கும் வரை, இக்குழுவை நிறுத்திவைப்பதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

No comments: