Sunday, July 3, 2011

சேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி ! சி.பி.ஐ விசாரணை ! முதன்மை மேலாளர் பணிநீக்கம் !

சேலத்துக்கு அடைமொழியாக இருக்கும், சேலம் உருக்காலை, இந்தியாவில் மிக முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். நம் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில்லறை காசுகள் வரை நாட்டிற்கு மிக முக்கியமான பொருட்கள் அனைத்தும் இந்த சேலம் உருக்காலையில் இருந்து உற்பத்தியாவதுதான்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலகத்தரம் மிகுந்தாது, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பபடும் பிளேடுகள், கத்தி, கத்தரி, ஊசி மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த இடத்துக்கு வைக்கப்படும் பிளேட்டுகள் என பல்வேறு மருத்துவ கருவிகள் இந்த ஆலையின் உருவான தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்படுகிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த உருக்காலைக்குள் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரிக்க சென்னையிலிருந்து மத்திய புலணாய்வு துறை அதிகாரிகள் வந்துள்ளனர், அதை தொடர்ந்து சேலம் உருக்காலையில் முதன்மை மேலாளர் அன்பானந்தன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வருடத்துக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கும் இந்த ஆலையில். வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தணிக்கை நடக்கும்.

கடைசியாக நடந்த தணிக்கையில், உருக்காலைக்கு மூலப்பொருட்கள் வாங்கியதில், ஒரே பொருளுக்கு இரண்டு முறை பணம் கொடுத்து. மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம், முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் 99, லட்சத்து 66,ஆயிரத்தி 722,ரூபாய் கையாடல் செய்துள்ளதுள்ளனர் என்பதை தணிக்கையாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்..

இந்த மோசடிகள் குறித்து செயில் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியது தணிக்கைத்துறை. அதன் எதிரொலியாக நிதி மற்றும் பொதுக்கணக்கு மேலாளர் ஈஸ்வரன் சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் சேலம் உருக்காலையில் மோசடி நடந்துள்ளது பற்றி புகார் கொடுத்தார்.

புகாரை பதிவு செய்த மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆறு பேர் நேற்று, சேலம் உருக்காலைக்கு வந்துவிசாரணை நடத்தினார்கள்.

அடுத்த கட்டமாக சேலம் உருக்கலையின் நிர்வாகம், மற்றும் பணிப்பிரிவு பொது மேலாளர் மஜூம்தார், அவருக்கு கீழ் பணியாற்றும் முதன்மை மேலாளர் அன்பானந்தனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றி உருக்காலையின் ஊழல் கண்காணிப்பு பிரிவு அலுவலர்களும் தனியே விசாரணை நடத்துகிறார்கள்.

இடைநீக்கம் செய்யப்பட்ட அன்பானந்தனின் பெயர், பதவி, பணிநீக்கம் செய்யப்பட்ட காரணம் போன்ற விபரங்களை முறையாக உருக்காலையின் அறிவிப்பு பலகையில் அதிகாரிகள் இன்னும் ஒட்டவில்லை.

அதனால், இன்னும் சிலர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்கள் சேலம் உருக்கலையின் உழியர்கள்.

No comments: