Friday, July 1, 2011

அழிந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகள்.



திருவனந்தபுரம், உலகில் உள்ள குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த மையம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செல்போன் கோபுரங்களாலும், பிற காரணங்களாலும் குருவிகள் இனம் அடியோடு அழிந்து வருவதாக கூறியுள்ளது.

கடந்த 2008-2009 ல் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் படி கேரளத்தில் குருவிகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கொல்லத்தில் உள்ள எஸ்.என் கல்லூரி விலங்கியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் சயீனுதின் கூறியுள்ளார்.

No comments: