Thursday, March 17, 2011

விஜயகாந்த் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு


விஜயகாந்த் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு


சென்னையில் தே.மு.தி.க., தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தனர். செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. விஜயகாந்திடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. இதுதொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்துடன் தா.பாண்டின், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் அங்கு கூடிய தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

3வது அணி அமையுமா? விஜயகாந்த் பதில்

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூ.மு.க. தலைவர் சேதுராமன், பார்வர்டு பிளாக்கின் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்த இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 3வது அணி அமைப்பது குறித்து பேசி முடிவு எடுப்போம் என்றார்.

இதேபோல் 3வது அணி அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அனைத்துக் கட்சிகளுடன் பேசிவிட்டு தான் 3வது அணி பற்றி முடிவெடுக்கப்படும். மூன்றாவது அணி அமைப்பது பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றார்.

ஜெ.வுடன் சமரசம் இல்லை: தா.பாண்டியன்


தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்த இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 3வது அணி அமைப்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுகவுடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் வைகோ

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. இதனை விஜயகாந்திடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. இதுதொடர்பாக விஜயகாந்த்துடன் தா.பாண்டின், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை ஈடுபட்டுள்ளது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது அணியில் மதிமுகவையும் இணைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதனால் வேலூர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வைகோ, அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

விஜயகாந்த் - பூவை ஜெகன்மூர்த்தி சந்திப்பு

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

No comments: