Tuesday, February 15, 2011

'லோக் சபா'வில் குடித்துக் கொண்டே ஒரு பேட்டி!


குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்று நாடுதழுவிய அளவில் விளம்பரம் செய்யும் அரசு, திரைப்படங்களில் குடிப்பது போன்ற காட்சிகளை சென்சார் மூலம் தடைசெய்கிறது. இதே விதிதான் தொலைக்காட்சிக்கும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 'லோக் சபா' தொலைகாட்சியில் இரு எழுத்தாளர்கள் குடித்துக் கொண்டே பேட்டி காணும் நிகழ்வொன்றை கண்டு அதிர்ந்தேன். பிற ஊடகங்களில் இது போன்ற நிகழ்வுகளை அனுமதிக்காமல் பாதுகாக்கும் அரசாங்கம், அரசு தொலைக்காட்சியில் எப்படி அனுமதித்தது?.

அடுத்து, ஏற்கனவே எழுத்தாளர்களின் தனிமனித ஒழுக்கம் விமர்சனைக்கு உள்ளாகி அடிக்கடி சர்ச்சயை கிளப்பிவரும் நிலையில், இது போன்ற பொது நிகழ்வில், அதுவும் அரசுத் தொலைகாட்சியில், என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் இது போன்ற அசிங்கங்களை அசால்ட்டாக செய்வார்கள்.

தொலைக்காட்சி அரங்கினுள் அமர்ந்துள்ளவர்கள் உறைந்து இருப்பது போல் அல்லாமல் பொதுமக்கள் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.



மதுபாட்டில் அருகே இருப்பவர் எழுத்தாளர் விக்ரம் சேத்., மதுகோப்பையை கையிலெடுப்பவர் மில்லர்.


மது நிறைந்த பாட்டில் பொதுமக்கள் பார்க்கும்படி ஒளிபரப்பாகிவிட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது.




போதையில் விக்ரம் சேத்.



தொலைக்காட்சி அரங்கினுள் அமர்ந்துள்ளவர்கள்







மில்லர்

1 comment:

devibala said...

. LAW MAKER SHOULD NOT BE A LAW BREAKER........gov strictly prohibiting the sales and ads in al the other channnels...but wats the point...shows lik this being telecasted in the gov channel is really disappointing and serious actions should be taken against this........