Thursday, February 3, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -1)


1.இந்தியாவை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல இளைய சமுதாயத்துக்கு தங்களுடைய அறிவுரை என்ன?
ஆர்.சரண்யா, சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

டாக்டர் அப்துல் கலாம் : நாம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையின் படி, எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக கீழ்க்கண்ட 5-விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை.

1. பெண் கல்வி மற்றும் உடல்நலம்

2. விவசாயம் மற்றும் உணவு பதனிடல்
3.தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம்
4.உள்கட்டமைப்பு வளர்ச்சி
5.முக்கிய தொழில்நுட்பங்களில் சுயசார்பு ஆகியன.

இவ்விஷயங்களை மனதில் கொண்டு இளைஞர்கள் தங்கள் படிப்பில் மிகச்சிறந்து விளங்குவதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்க உதவலாம். நீங்கள் ஒவ்வொருவரும், வாரவிடுமுறை நாட்களில் உங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு 5 பேருக்கு படிக்க எழுத உதவலாம். உங்கள் வீட்டை சுற்றியும் பள்ளியை சுற்றியும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கலாம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

2.பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் கண்டிப்புடன் கடைபிடிப்பதில்லை. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நடந்து கொள்ள உங்கள் ஆலோசனையைக் கூறுங்களேன்?
பசுவலிங்கப்பா, கோகுலம் காலனி, கோவை-41

டாக்டர் அப்துல் கலாம் : புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நல்ல உடல்நலம் நல்ல மனநலம் ஆகியனதான் நல்ல வாழ்க்கைக்கான, நல்ல குடும்பத்துக்கான, நல்ல நாட்டுக்கான அடித்தளம். முடிவு எடுக்க வேண்டியது தனிநபர்கள்தான். ஆனால் அது அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாட்டுக்கும் நல்லதாக இருக்க வேண்டும்.

3.இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் தகவல் தொழில்நுட்பம் என்ன பங்கு வகிக்கும்?
வி.கண்ணன், வி.எச்.என்.எஸ்.என்., கல்லூரி, விருதுநகர்.

டாக்டர் அப்துல் கலாம் :
சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க முடியும். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சியிலும் அதிக பங்கு வகிக்க முடியும். தொலை தொடர்பு கல்வி, மின்னணு நிர்வாகம், தொலை மருத்துவம், மின்னணு நுõலக வசதி மற்றும் அறிவு மையங்கள் ஆகியவற்றை அமைக்க அவை உதவும். இது அறிவு மற்றும் திறன் அளிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் மற்றும் மின்னணு நிர்வாக சேவையை மக்களுக்கு அளித்து அவர்களை சக்தி மிக்கவர்களாக்கி தரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது. பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயம், சேவை மற்றும் உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. தொழில் சிறப்பாக நடத்துவதற்கான களம்தான் தகவல் தொழில்நுட்பத்துறை.

4.இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறார். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகுமா?
வனிதா, அசோக்நகர், சென்னை, திவ்யா, ஸ்ரீ அகோபில மட ஓரியண்டல் பள்ளி, சென்னை. முகில் வண்ணன், காருண்யா பல்கலை. கோவை. மோகன் சிவானந்தம், புதுச்சேரி பல்கலை. சண்முக சுந்தரம், திருவள்ளுவர் நகர், ராஜபாளையம்.

டாக்டர் அப்துல் கலாம் : கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் 22 கோடி மக்களை கைதுவக்கி விடவும் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே நம் நாட்டின் முன் உள்ள சவால். அடுத்த பத்தாண்டுகளுக்கு நம் கடின உழைப்பால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 10 சதவீதமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வி, சுகாதார சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் மதிப்பு கூடுதல் சேவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இப்போதுள்ள தனிநபர் சராசரி வருமானத்தை மும்மடங்காக உயர்த்த வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சியை உள்ளடக்கிய உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அடுத்த 12 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தலைவர்கள் செயல்பட வேண்டும்.
இதுபோன்று உழைத்தால் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகும். அதுவரை நம்வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், நகர்ப்புறத்தையும், மாநிலத்தையும் மற்றும் தேசத்தையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்துதான் சுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்.

5.வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவது எப்படி... இலக்குகளை அடைவதில் சில நேரங்களில் தடைகள் ஏற்படுகின்றன. இவற்றை கடந்து சாதிப்பது எப்படி?
செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. பிரீத்தா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மதுரை. புருஷோத்தமன், பாங்காக், தாய்லாந்து
ஐஸ்வர்யா, டி.ஏ.வி. பள்ளி, சென்னை.சுப்பையா, லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி. ஐஸ்வர்யா, ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி, சென்னை. சுரேஷ்கிருஷ்ணா, ஐ.சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட், சிவகாசி.

டாக்டர் அப்துல் கலாம் : கீழ்கண்ட நான்கு விஷயங்களை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1. உங்கள் வாழ்க்கையின் தெளிவான லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
2. அது தொடர்பான உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.அதை அடைவதற்காக மிகக் கடினமாக உழையுங்கள்.
4. விடாமுயற்சி அவசியம். பிரச்னை உங்களை தோற்கடிக்கக்கூடாது. நீங்கள்தான் பிரச்னைகளை வெல்ல வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் லட்சியத்தை அடைவதிலிருந்து யாரும் தடுக்க முடியாது. நீங்கள் கண்டிப்பாக லட்சிய சிகரத்தை தொடுவீர்கள். எந்த பணியானாலும் அதை மிகச்சிறப்பாக செய்து முடியுங்கள். அதன் மூலம் நீங்கள் தேச வளர்ச்சிக்கு பாடுபடுகிறீர்கள்.

6.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்தில் பயன்படும்?
சவும்யா, கேந்திரிய வித்யாலயா, அசோக்நகர், சென்னை. பாலாஜி கவுலா, மதுரை காமராஜ் பல்கலை., மதுரை. மன்னர் மன்னன், அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால். காசிநாதன், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுவரி, சிவகாசி.நெல்சன், பயனியர் கலை அறிவியல் கல்லுவரி, கோவை.ராம்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி

டாக்டர் அப்துல் கலாம் : யுரேனியம் அணு உலைகள் மூலமாக நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியமானது. தற்போது யுரேனிய அணு உலைகள் 55 சதவீத திறனையே வெளிப்படுத்துகின்றன.

உயர்திறன் கொண்ட அணு உலைகளுக்குத் தேவையான தோரியம் எரிபொருளுக்கு வெளிநாடுகளை சாராமல் நம் ஆராய்ச்சியின் வழியாக சொந்தக் காலில் நிற்கும் நிலை வரும் வரையில் யுரேனியம் நமக்குத் தேவைப்படும்.

2030ம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே நம் லட்சியம். பூமியிலிருந்து எடுக்கப்படும் மரபுசார்ந்த எரிபொருள் குறைந்துவருவதால், சூரிய சக்தி, அணுசக்தி மற்றும் உயிரி எரிபொருள் வழியாகவும் காற்றாலை, ஹைட்ரஜன் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல பிற சக்தி மூலமாகவும் நாம் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். எனவே அணு எரிபொருள் எங்கு கிடைத்தாலும் அதை வாங்குவதுதான் புத்திசாலித்தனமானது.

இதே கேள்வியை இளைஞர்களும் பொதுமக்களும் என்னிடம் இமெயில் வழியாக கேட்டு வருகிறார்கள். அந்த கேள்விகளுக்கு பலமுறை நான் மீடியா வாயிலாக பதில் அளித்திருக்கிறேன். இருந்த போதிலும் இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காணும் விதமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் அளித்துள்ள விரிவான விளக்கம் பில்லியன் பீட்ஸ் இபேப்பரின் அடுத்த இதழில் வெளியாகிறது. www.abdulkalam.com இணையதளம் வழியாக இந்த இதழை நீங்கள் படித்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.

7. மனிதன் கால் வைத்ததற்கும் இப்போது அனுப்பியுள்ள சந்திரயானுக்கும் என்ன வேறுபாடு?
ஜோ பெர்னாண்டோ, கேந்திரிய வித்யாலயா, மண்டபம்.ரேஷ்மா, ஸ்ரீஅரவிந்த மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.மணிகண்டன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், வேலூர்.சுகன்யா, கே.சி.இ.டி., விருதுநகர்.சிதம்பரம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்.விக்கி, எஸ்.டி.ஏ., மெட்ரிக் பள்ளி, திருச்சி

டாக்டர் அப்துல் கலாம் : சந்திரயான் 100 கி.மீ., கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனை சுற்றி வருகிறது. மிகக்குறைந்த செலவில் சந்திரனுக்கு செல்ல முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. சந்திரனின் தொலையுணர்வு செயற்கைக்கோளாக சந்திராயன் செயல்படும். சந்திரனின் தரைப்பகுதியை ஆராய்ந்து, ரசாயன மற்றும் தனிமங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான தகவல்களை அனுப்புவதே சந்திரயானின் நோக்கம். மனிதர்கள் யாரும் சந்திரயான் திட்டத்தில் செல்லவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் நிலவிலும் ஓர் இந்தியரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

8.தலைவர் ஆவதற்கு தேவைப்படும் தகுதிகள் என்ன? தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி?
வசந்த் தங்கவேல், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாக்டர் அப்துல் கலாம் :தொலைநோக்கு பார்வை, நடுநிலை நோக்கு, நம்மால் முடியும் என்ற எண்ணம், வெல்ல முடியாததை வெல்லும் எண்ணம் ஆகியனவே தற்போது வளர்ந்து வரும் பொருளாதார யுகத்தில் தலைமைப்பண்புக்கு தேவைப்படக்கூடியன. ஆய்வு மனப்பான்மை, கற்பனை வளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9.லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
கார்த்திக், அரசு கலைக் கல்லூரி, திருநெல்வேலி. குழந்தை வேல், அண்ணாமலை பல்கலை., சிதம்பரம். முகுந்தன், பிஷப் அம்புரோஸ் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல்கலாம் : குடும்பத்தில்தான் அறிவார்ந்த குடிமக்கள் உருவாகின்றனர். இந்த சூழ்நிலை உருவாகவில்லை என்றால் இப்போது நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலையைத்தான் உணர முடியும். லஞ்சத்தை ஒழிப்பதற்கான நாடு தழுவிய இயக்கம் தேவைப்படுகிறது. குடும்பத்திலும் பள்ளிகளிலும்தான் தோன்ற வேண்டும்.

மூன்று பேரால் மட்டும்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான் அவர்கள். குழந்தைப் பருவத்திலேயே நேர்மையை அவர்கள் கற்பித்தால் அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். பொது வாழ்வில் ஊழலை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இயக்கம் துவங்க வேண்டும்.

குடும்பத்தில், கல்வி பயிலும் இடத்தில், பணியிடத்தில், தொழிலில், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலையில், நிர்வாகத்தில், அரசியலில், அரசில், நீதித்துறையில் நேர்மை இருக்க வேண்டும்.

10.விண்வெளி வீரர் ஆவதற்கு நான் எந்த பிரிவு பாடத்தை படிக்க வேண்டும்?
கோகுல், சாந்தோம் மேல்நிலை பள்ளி, சென்னை. சண்முகராஜ், சின்மயா வித்யாலயா மேல்நிலை பள்ளி, சென்னை. தமிழ் அரசி, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலை பள்ளி, புதுச்சேரி. திருநாவுக்கரசு, பூர்ணம்விஸ்வநாத், ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, மேல்மருவத்தூர். காமாட்சி, ஸ்ரீலதாங்கி வித்யா மந்திர், கோவை

டாக்டர் அப்துல் கலாம் : வான் இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டுள்ள முதுநிலை படிப்பை படிப்பது, விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றுத்தரும்.

11.விமானவியல் படித்து விஞ்ஞானி ஆக ஆசை. இத்துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
முகமதுஅப்துல் ரஹ்மான், சாம்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. கோகுல் அமிர்தா வித்யாலயம், கோவை. கவுசிக் சுந்தரராஜன், அகோபிலமட ஓரியன்டல் மேல்நிலை பள்ளி, சென்னை. ராஜேஸ்வர், ஆஸ்ரம் ஐ.சி.எஸ்.இ., டி.ஏ.எஸ்.எஸ்.சி., பள்ளி, சென்னை. தானியா, சி.இ.ஓ.ஏ., மாஸ்டர்ஸ் ஸ்கூல், மதுரை. குமரகுரு, பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை. வினோத், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல் கலாம் : பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்த பின், பி.இ., படிப்பில் விமானவியல் துறையை படிக்கலாம். விமானத்துறை மற்றும் விண்வெளித் துறையில் இத்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே சொந்த போர் விமானங்கள் தயாரிக்கிறோம். 50 -90 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பும் நடந்து கொண்டுள்ளன. விண்வெளியில் நாம் அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விருக்கிறோம். எனவே இத்துறையில் சிறந்த விஞ்ஞானியாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

12.தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தேர்வு பயத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
திலீபன், ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர். சுகன்யா, பாஸ்கோ அகடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சென்னை. ஆஷா, முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர்.ஜகதீஸ், ஸ்ரீவேணுகோபால் வித்யாலயா, சென்னை.சந்தோஷ்குமார், லட்சுமி நகர், போரூர்.

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் படிப்புடன் விளையாட்டு, இசை, கலை மற்றும் கலாச்சார விஷயங்களில் பங்கு கொள்ளுங்கள். படிப்பதற்காக நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். படிக்கும்போது உங்கள் சிந்தனைகளை படிப்பில் மட்டுமே முழுமையாக செலுத்துங்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கு போதுமான அறிவு வளரும். அப்போது தேர்வு பயம் வராது. நீங்கள் மிகச்சிறப்பாக மதிப்பெண் எடுப்பீர்கள்.

13..என்னைப் போன்ற மாணவர்கள் எதிர்காலம் சிறக்க தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்ன?
பிரியங்கா, கக்கன் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-45. மனோஜ், ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர், ஈரோடு.

டாக்டர் அப்துல் கலாம் : உங்களுடைய லட்சியத்தை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வெற்றி அடையுங்கள். நேர்மையான சிந்தனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலம் சிறக்கும்.

14.கடலிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யுமா?
சித்ரா சத்தியமூர்த்தி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, திருவேற்காடு.

டாக்டர் அப்துல் கலாம் : இந்தியாவின் கடற்கரை நீளம் 7,500 கி.மீ., அலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய சிறிய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்புள்ளது. குஜராத்திலும், கேரளாவிலும் இரு வகையான முன்மாதிரி திட்டங்கள் தற்போது செயல்படுகின்றன.

இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியில் அணு, நீர் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவுக்கு தேவைப்படும். இது தற்போதுள்ள தேவையை விட மும்மடங்காக இருக்கும். தோரியம் அடிப்படையிலான அணு உலைகள், சூரிய மின்சக்தியை பரவலாக பயன்படுத்துதல், கடல் அலை மின்சாரம் உள்ளிட்டவற்றிலிருந்து நாம் மின்சக்தி பெற வேண்டும்.


15.சிறந்த விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும்?
விகாஸ், கார்மல்ஸ் பள்ளி, திருச்சி. ரோகிணி, சாய் மெட்ரிக் மேனிலை பள்ளி, மடிப்பாக்கம், சென்னை. சரண்யா தேவி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் கல்லூரி, மதுரை. வெங்கடராமன், அரசு கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி. பாலசுப்ரமணியன், டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி, சென்னை. முகமது பர்ஹான், எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல். ராமசுப்ரமணியன், காமராஜ் மேனிலைப்பள்ளி, குரும்பூர், துõத்துக்குடி. அன்பு செல்வம், எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, கிடாரிபட்டி, மதுரை. விக்னேஷ், என்.எஸ்.என்., மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சிட்லபாக்கம், சென்னை. விஜய் கார்த்திக், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, மதுரை. சுதா, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, சீனிவாசா நகர், சென்னை. கீர்த்தனா, ஏ.வி.மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி, சென்னை. ராகவி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, திருமுல்லைவாயல், சென்னை.பாஸில் கான், என்.எஸ்.என்.மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் வாழ்க்கையில் முதலில் லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இது விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே லட்சியம் வேண்டும். நீங்கள் என்னவாக உருவாகப் போகிறீர்கள் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தொடர்பாக உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கடினமாக அதை நோக்கி உழையுங்கள். விடா முயற்சியுடன் இவற்றை எல்லாம் செய்து வந்தால் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையாலாம்.

வளரும்.

நன்றி : கல்வி மலர்.

Tuesday, February 1, 2011

குறள் கொடுத்த வாழ்வு. பகுதி-1

தேன்தமிழ்ப் புலவர் மு.வைத்திலிங்கம்.


குன்றுகளுக் கிடையில் கிடக்கும் சிற்றூர். அந்த ஊரில் இருந்த குடும்பங்களே ஐந்துதான். எல்லாம் ஒரு குடியில் கிளைத்து வந்தவை. கொஞ்சம் நிலத்தை வைத்துக் கொண்டு கோட்டைக் கனவில் மிதப்பவர்கள். தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து முன்னேற்ற வேண்டும் எனத் துடிக்கும் பெற்றோர்கள். கல்வியில்லா அவர்கள், போதிய வருவாய்க்கு வழியில்லா அவர்கள், அல்லும பகலும் உழைப்பதில் அலுப்புக் காணாதவர்கள். என்றாலும் கைக் கெட்டினால் வாய்க்கெட்டாது என்ற நிலை அவர்களோடு பிரியாத் தொடர்பு கொண்டு பிணைந்து கிடந்தது.

ஒன்பது பிள்ளைகளில் என்னை முதல் மகனாகப் பெற்றார்கள். அக்கம்பக்கத்துப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி முடிந்தது. மேச்சேரியில் உயர் தொடக்கக் கல்வியும் முடிந்தது. இதற்குள் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகள், வெளியுலக விளக்கம், அறிவு நிலை ஏதும் எனக்குத் தெளிவாக நினைவில்லை. படித்து வளர வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை. தந்தையின் விருப்பம் என்னைப் படிக்க வைத்தது. பள்ளிக்குச் சென்றேன். பாடங் கேட்டேன். வகுப்பு மாறினேன். இவை தாமாக நடந்தன. அவ்வளவுதான்.

எம் பகுதியில் உயர்பள்ளி இல்லை.எனக்குக் கிணற்றில் குதிப்பதும், மரம் ஏறி விளையாடுவதும், நிலத்தில் தாய் தந்தையருடன் ஏதாவது வேலை செய்வதும் தவிர பிறவற்றில் நாட்டமில்லை. என் தந்தையாரின் விருப்பம் என்னை வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தது

புது இடம்; விடுதி வாழ்க்கை; பெரிய பள்ளி; ஏராளமான ஆசிரியர்கள். தமிழ் உணர்வுகளோடு பாடம் சொல்லும் பாங்கு. இவை தொடக்கத்தில் எனக்குப் புதியவை. அந்தப் புதுமை மனம் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பியது. என்னை இயக்கவும் தொடங்கியது. என்னை அறியாமல் அந்தச் சூழலுக்கு மாறிக் கொண்டிருந்தேன்.

அங்குத் தான் வள்ளுவரையும் திருக்குறளையும் நான் அறிந்து கொள்ளத் தொடங்கினேன். தினம் ஒரு குறள் கரும்பலகையில் எழுதிப் போடப்படும். ஆசிரியர் அதற்கு விளக்கம் சொல்லுவார். நல்ல வாழ்வுக்கு அது வழிகாட்டி என்றும் அடிக்கடி தமிழாசிரியர் வகுப்பில் சொல்லுவார். மாணவர்கள் திருக்குறளை நாளுக்கொன்றாவது மனப்பாடம் செய்ய வேண்டும் எனச் சொல்லுவார். அதனால் உந்தப்பட்ட மாணவர்கள் திருக்குறள் படிக்கத் தொடங்கினர்; நானும் தான்! திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் வைப்பார்கள். தினம் ஒரு குறள் படிக்கும் பழக்கமும் வந்த்து.

1945ல் வேலூர் பள்ளி வாழ்க்கை முடிந்தது. 8ம் வகுப்பில் தோல்வியுடன் திரும்பினேன். 1946ல் மேச்சேரியில் உயர்பள்ளி தோன்றியது. அங்குச் சேர்ந்து படித்தேன். மிகவும் பின்தங்கிய மாணவர்களே நிறைந்த அந்தப் பள்ளியில் நான் சற்று விவரம் தெரிந்தவனாக, வெளியூர்களைக் கண்டவனாக இருந்தேன். நூல்கள் படிக்கும் பழக்கமும் கவிதைகள் படிக்கும் ஆவலும் ஒரு வகையான துணிவும் எனக்குத் துணையாக நின்றன. அதனால் மாணவர்களின் பார்வை என்மேல் படர்ந்தது.

திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லிக் காட்டுவதும் அழகாகப் பாவேந்தர் கவிதைகளைப் படித்துக் காட்டுவதும் கதைகள் சொல்லுவதும் என் மேதைத் தனமாக விளங்கியது மாணவர்கள் என்னை விரும்பிச் சுற்றினர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையாக இருந்த என்மேல் ஆசிரியர்களும் அன்பு காட்டினர்.

அடுத்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கு - நான்காம் படிவத்துக்குச் சென்றேன். அந்த ஆண்டு எங்களுக்குப் புதிய தமிழாசிரியர் வந்தார்.தமிழ்க் கல்லூரியில் ஐந்தாண்டுகள் தமிழ் படித்துப் புலவர் (வித்துவான்) பட்டம் பெற்றவர் அவர். இளைஞர். தமிழ்ப் பற்றும், துணிவும், துடிதுடிப்பும் மிக்கவராக அவர் விளங்கினார். அவர்தம் பெயர் புலவர் சு.பழனியாண்டி என்பது. தலைமை ஆசிரியர் அவரை எங்கள் வகுப்புக்கு அழைத்து வந்தார். 'மாணவர்களே! இவர் நம் பள்ளியின் புதிய டமில் பண்டிட்' என்று அறிமுகப் படுத்தி வைத்தார். தமிழாசிரியர் தனக்குள் சிரித்துக் கொண்டார். அதன் காரணம் பின்னால் தான் எங்களுக்குப் புரிந்தது.

தமிழாசிரியர் எங்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தார். கணீரென்ற இளங்குரலில் 'அன்பு மாணவர்களே!' என அழைத்தார். அனைவர் நெஞ்சும் நிறைந்தன. ஏன்? அதுவரை எங்களிடம் அத்தனைப் பரிவுடன் யாரும் பேசியதில்லை. பாடம் தொடங்குமுன், இதைக் கவனியுங்கள் எனச் சொல்லி கரும் பலகையில் ஒரு குறளை எழுதிக் காட்டினார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின். --- என்பது அந்த குறள்.

யாராவது இதை அழகாகப் படித்துக் காட்டுங்கள் என்றார். யாரும் எழவில்லை. என்னைப் 'பண்டிட்' என்று கருதி அஞ்ச வேண்டாம். நான் தமிழாசிரியன். உங்கள் தமிழாசிரியன். அஞ்சாமல் படியுங்கள் என்றார்.

எவரும் எழவில்லை. நான் மட்டும் நின்றேன்.

.....ம், படி என்றார். படித்தேன்.

நன்று அழகாகப் படிக்கிறாயே! உனக்குத் திருக்குறள் மனப்பாடமாகத் தெரியுமா?

தெரியும் ஐயா!

எத்தனைத் தெரியும்?

இருநூறு தெரியும் ஐயா!

வாழ்க! இன்னும் நிறைய மனப்பாடம் செய். இந்தக் குறளுக்கு உன்னால் பொருள் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

இயலாதுங்க ஐயா! என்றேன். புன்முறுவல் கொண்டார். பின் பொருள் சொன்னார்.

எத்தனையோ கற்பனைகளில் மிதப்பவன் நான். இதெல்லாம் முடியுமா? என எண்ணி ஏங்குபவன் நான். தமிழாசிரியர் சொன்ன குறளின் கருத்து என் நெஞ்சில் பளிச் என ஒரு நம்பிக்கை மின்னலைத் தோற்றுவித்தது.

ஐயா! என அழைத்து நின்றேன். புன்னகையுடன் என்னை நோக்கினார்.

என்ன ஐயம்? கேள் என்றார்.

நினைப்பதெல்லாம் நடக்குமா? ஏனெனில் நாங்கள் ஏழைகள்? என்றேன்.

நடக்கும். எண்ணத்தில் நினைவில் உறுதி வேண்டும். மிகப் பெரிய சாதனையெல்லாம் செய்து முடித்த பெருமக்களுக்குத் துணை நின்றது எது? வானூர்தியைக் கண்டு பிடித்தார்களே 'ரைட் சகோதரர்கள்' அவர்களுக்குத் துணைபுரிந்த்து எது? ஆயிரக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்து இந்த உலகுக்குத் தந்தாரே எடிசன். அவரென்ன கோடிகோடிச் செலவம் குவித்து வைத்தவரா? இல்லை. மிகச் சாதாரண ஏழை என்றார்.

மாணவர்கள் தமிழாசிரியரின் சொற்களை வாய் பிளந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கோ நெஞ்சகத்தில் ஓர் எழுச்சி பொங்கிக் கொண்டிருந்த்து.

என்ன நம்புகிறாயா? என்றார்.

நம்புகிறேன் ஐயா! என்றேன்.

தினமும் காலையிலும், மாலையிலும் இந்தக் குறளைச் சொல்லிப் பார். அதன் பொருளை எண்ணிப் பார் என்றார்.

எண்ணியதெல்லாம் முடியும். முடியும் என என் உள்ளம் பரணி பாடியது. சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். கவிதைகள் எழுதிப் பார்த்தேன். எம் தோட்டத்துக் காவல் குடிசையில் விடிய விடிய புதிய புதிய நூல்களைப் படித்தேன். எனக்குப் புதிய தெம்பு உண்டானது.

அந்த ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. விடுதலைத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட ஆசிரியர்கள் விரும்பினர். கலை நிகழ்ச்சிகள் ஆயத்தம் செய்யும் பொறுப்பு தமிழாசிரியரிடம் விடப்பட்டது. அவர் என்னை அழைத்தார். விடுதலையின் முதல் நன்மை மதுவை ஒழித்ததுதான். அதை வைத்து ஒரு நிகழ்ச்சி நீ தர வேண்டும் என்றார்.

ஐயா! எனக்குப் பயிற்சி எதுவும் இல்லை என்று தயங்கினேன்.

உன்னால் முடியும். இந்த இசையில் செய்துபார். என்று நாட்டுப்புறப்பாடல் ஒன்றின் இரு வரிகளைப் பாடிக் காட்டினார்.

நம்பிக்கையுடன் நிமிர்ந்தேன். அன்றிரவு என் படிப்பறைக் குடிசையில் அமர்ந்து எழுதினேன்.

யாப்பறிவு இல்லாமல் ஓசை ஒழுங்கை மட்டுமே நம்பி எழுதிய என் முதல் பாட்டை அடுத்த நாள் எம் தமிழாசிரியரிடம் காட்டினேன். அவர் மகிழ்ந்து போனார்! வாழ்க! வாழ்க என வாழ்த்தி என்னைத் தட்டிக் கொடுத்தார்.

நாட்டுப்புற ஆடல் தெரிந்த நண்பர் கோவிந்தனை வைத்துக் கொண்டு, இன்னும் சில நண்பர்களையும் கூட்டிக் கொண்டு ஆடலை உருவாக்கினோம்.அந்த சேர்ந்திசைப் பாடலுடன், ஆடலும் சேர்ந்து பள்ளியின் விடுதலை விழாவை வெற்றி பெற. வைத்தது

பாட்டு அருமை, ஆடல் மிகச் சிறப்பு என்று மாணவர்கள் என்னை பாராட்டினர். ஆசிரியர்கள் என்னை வாழ்த்தினர். என் நெஞ்சோ திருக்குறளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு தினமும் ஏதாவது எழுதுவேன். தமிழாசிரியரிடம் காட்டுவேன்.அவர் முதலில் பாராட்டுவார். பின் சில திருத்தங்கள் சொல்வார். அவை என் உணர்வுகளுக்கு ஊட்டமாயின. தமிழாசிரியரின் அன்பும், திருக்குறளின் தூண்டுதலும் எனக்கு மிகப்பெருந் துணைகளாயின.

ஒரு நாள் தம்பீ! நிறைய இலக்கியங்களை நீ படிக்க வேண்டும். அவை உன்னைச் சிறந்தவனாக்கும், என்று சொல்லி, சிலப்பதிகாரத்தை என்னிடம் கொடுத்தார். அவ்வளவு பெரிய நூலை அன்றுதான் பார்த்தேன். மகிழ்வோடு அதனை வாங்கிக் கொண்டு வகுப்புக்கு வந்தேன்.மாணவர்கள் அதனைக் கண்டு வியந்தனர். 'டேய்! இவன் இத்தனை பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்கிறான் பாருங்கடா' என்றான் ஒருவன். எனக்கு அது பெருமையாக இருந்தது.

ஒரு வாரங்கழித்து அந்த நூலுடன் தமிழாசிரியரிடம் சென்றேன்.

என்ன தம்பீ! படித்தாயா? புரிந்ததா? என்றார்.

இல்லைங்க ஐயா! சரியாகப் புரியவில்லை என்றேன்.

தொடர்ந்து படி! முயற்சி செய்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் -- இந்தக் குறள் உனக்குத் தெரியுமா?

ஐயா! குறள் தெரியும். ஆனால் பொருள் தெரியாது என்றேன்.

முயற்சி செல்வத்தை வெற்றியைத் தரும். முயலாமை வறுமையை, தோல்வியை வழங்கும். என்றார் தமிழாசிரியர். இந்தச் சொற்கள் என் உணர்வுகளுக்கு ஊட்டம் தந்தன. தொடர்ந்து படித்தேன். படிக்கும் போதே குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இரண்டு மூன்று முறை சிலப்பதிகாரத்தைப் படித்த போது எனக்கு அதன் கதையும் கதை மாந்தர்களும் நன்கு விளங்கினர். சிலப்பதிகாரத்தை தமிழாசிரியரிடம் திருப்பித் தந்தபோது, அதில் சில வினாக்கள் கேட்டார். நான் சொல்லிய விடை சரியாக இருந்ததால் அவர் என்னைப் பாராட்டினார். மேலும் சில இலக்கியங்களைத் தந்து படிக்கத் தூண்டினார். படித்தேன் புரியும் வரை திருப்பித் திருப்பிப் படித்தேன்.

இப்படி என் இலக்கியப் படிப்பு இனிதே வளர்ந்தது. தொடர்ந்து ஒரு நாள் வகுப்பில் எம் தமிழாசிரியர் 'தம்பிகளே! கல்வியில்லாக் கிராமங்கள் உங்களை இங்கே அனுப்பியுள்ளன. அவை அறியாமை சூழ்ந்து, அழுக்கும் குப்பையும் நிறைந்த சுகாதாரமில்லாமல் கிடக்கின்றன. இரவு, நேரங்களில் நீங்கள் அங்கெல்லாம் சென்று கல்வியின் தேவை, சுகாதாரத்தின் இன்றியமையாமை ஆகியவை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்' என்றார்.

அன்றிரவே என் பெரியப்பாவிடம் 'இரவில் ஊர்களுக்குச் சென்று கூட்டம் போட்டுப் பேசலாமா?' என்று கேட்டேன். அவர் உடனே ஒப்புக் கொண்டு பாராட்டினார்.

அடுத்த நாள் முதல் அக்கம் பக்கம் உள்ள ஊர்களில் தினம் ஒரூரில் என் பெரியப்பா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ஊர்க்காரர்களும் இராந்தல்களுடன் அங்கே கூடி நாங்கள் பேசுவதை ஆவலுடன் கேட்பார்கள். பலருக்குத் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எண்ணம் எழுந்தது. வீட்டின் சுற்றுப் புறங்களை தூய்மை செய்து, குப்பைகளை அள்ளிக் குப்பைக் குழிகளில் கொட்டினார்கள். அது மக்கி நல்ல எருவானபோது நிலத்திற்கு இட்டு மகிழ்ந்தார்கள். இப்படி எங்கள் பணி இரண்டாண்டுகள் இடைவிடாது நடந்தது.

எங்கள் பணியைப் பற்றி அடிக்கடி நான் தமிழாசிரியரிடம் சொல்லுவதும், அவர் தவறாமல் என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதும் தொடர்ந்து நடந்தன . இதற்கிடையில் எங்கள் ஊர்ப் பள்ளிக் கூடத்தில் இரவு நேரத்தில் மாணவர்களைக் கூட்டித் தனிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியையும் தொடங்கினோம். படிக்காத பெரியவர்களை அழைத்து அவர்களுக்கு எழுத்தறிவிக்கும் பணியையும் செய்தோம்.அவர்கள் அங்குத் தினமும் ஆவலாக வந்து கற்றார்கள். ஒற்றுமை, உழைப்பு, முயற்சி போன்றவற்றைத் தூண்டும் பல கதைகளையும் சொல்வேன். நானறிந்த அளவுக்குத் திருக்குறள் பற்றியும் சொல்வேன். அவர்களும் வாய் திறந்த வண்ணம், நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் இரவு 12மணிக்கு மேலும் கூடப் பாடம் நடக்கும்.வகுப்பு முடிந்தவுடன் அங்கேயே படுத்துக் கொள்வோம். விடியலில் எழுந்து அவரவர் வேலைகளுக்குச் சென்று விடுவோம்.

இதனால் எம்மூர் மாணாக்கர்கள் மேச்சேரி உயர்பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுதச் சென்றால் அனைவரும் தேறுவார்கள். தலைமையாசிரியரும் இது குறித்து எங்களைப் பாராட்டுவார். நல்லதெல்லாம் சொல்வதற்குப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

- வளரும். -



Tuesday, January 25, 2011

த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று துவங்கியது


ஒருவழியாக ஆரம்பித்துவிட்டார்கள் ஷங்கரின் த்ரி இடியட்ஸ் படத்தை! பெரும் இழுபறியாக இருந்த இந்த படம் கை கழுவப்பட்டுவிட்டது என்றே பலரும் கிசுகிசுத்து வந்தார்கள்.

முதலில் இப்படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பின்பு கடைசி நேரத்தில் அவராக விலகிக் கொண்டார் என்றும், இல்லையில்லை... படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின. விஜய்க்கு பதிலாக சூர்யாவை நடிக்க வைக்கிற முயற்சியில் வெற்றியும் கண்டார் ஷங்கர். அதிலும் ஒரு சின்ன இழுபறி. தெலுங்கு, தமிழ் இரண்டு மொழி தயாரிப்பில் தமிழை மட்டுமாவது எங்கள் உறவினர் ஞானவேல் தயாரிக்கட்டும் என்று சூர்யா ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அப்புறம் அதையும் முறியடித்து இன்று படப்பிடிப்பை துவங்கிவிட்டார் ஷங்கர்.

ஊட்டியில் இன்று நடைபெறும் படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்ட பின் அடுத்த மாத இறுதியில் கலந்து கொள்கிறாராம் சூர்யா.

25-01-2011


எழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்...

நாஞ்சில் நாடன்


‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருபவர். இதுவரையிலும் 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’ மிக வெற்றி பெற்ற படைப்பு. 8 பதிப்புகளில் இதுவரையிலும் 18 ஆயிரம் பிரதிநிதிகள் விற்பனையாகியுள்ளன. ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் இது திரைப்படமாகியுள்ளது.

எழுத்து இவருக்குத் தவமோ, வேள்வியோ, பிரசவ வேதனையோ, ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சியும் அல்ல. பேரும் - புகழும் தேடும் முயற்சியுமல்ல. மாறாக மனிதர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. தனது சுயத்தைத் தேடும் முயற்சி. இவ்வாறு அவர் கூறுவதிலிருந்தே எழுத்தை நாஞ்சில் நாடன் அணுகும் விதத்தின் தனித்தன்மை புலனாகும். தனது எழுத்தை ஓர் ஆயுதமாக மாற்றிக் கொள்ள தனது கட்டுரைகள் உதவியதாகச் சொல்கிறார் இவர்.

இவரது ‘சதுரங்கக் குதிரை’ நாவல் 1995ல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. மும்பை தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, லில்லி தேவசிகாமணி விருது, அமுதன் அடிகள், கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை நாஞ்சில் நாடனின் படைப்புகள் பெற்றுள்ளன. இவரின் ‘மிதவை’ நாவல் பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்காக நேஷனல் புக் ட்ரஸ்ட்டினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவரின் கருத்துகளோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம்; ஆனால் அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும்பட வேண்டுமென்பதே நாஞ்சில் நாடனின் எதிர்பார்ப்பு.

நாஞ்சில் நாடனுக்கு, 63வது வயதில் சாகித்திய அகாடமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனாலும், விருது கிடைத்த மகிழ்ச்சியின் பின்னே நீண்டகாலப் புறக்கணிப்பின் வலி உள்ளதாக இவர் உணர்கிறார்.

“காலம் கடந்த அங்கீகாரம் சகிக்க முடியாதது. சரியான நேரத்தில் சரியான நபருக்கு அங்கீகாரம் கிடைப்பது அவசியம்” - என்கிறார் நாஞ்சில் நாடன்.

சந்திப்பு: கமலாலயன், கோவை தி.மணி, மு.பரமேஸ்வரன்

(கோவையில், மரங்களடர்ந்த ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள நாஞ்சில் நாடனின் இல்லத்தில் நடைபெற்ற நேர்காணலின் எழுத்துவடிவப் பதிவு இனி தொடர்கிறது..)

உங்களின் இளமைக்காலத்திலிருந்து துவக்கலாமா...

நாஞ்சில் நாடன் : நான் பிறந்து வளர்ந்த ஊர் வீரநாராயணமங்கலம். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் இருக்கிறது. அப்பா விவசாயி. எங்கள் ஊர்தான் அந்த மாவட்டத்தில் இரண்டாவது திமுக கிளைக்கழகம் அமைந்த ஊர். திராவிட இயக்கமும், பொது வுடைமை இயக்கமும்தான் அந்த நாட்களில் மிக வலுவாக இருந்தன. எங்களின் மீது தாக்கம் செலுத்தியதும் அப்போது இந்த இயக்கங்கள் தான். இரண்டிலும்கூட திராவிட இயக்கம்தான் மாண வர்களை அதிகமாக ஈர்த்தது. அன்றைய காலகட்டம், ஓர் அரசியல் எழுச்சிமிக்க காலம். எங்கள் ஊரில் திராவிட இயக்கத் தலைவர்கள் நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன், பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பி.ராம மூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் இப்படியாகப் பெரும் தலை வர்கள் வந்து பேசுகிற அரசியல் கூட்டங்கள் ஏராளமாக நடக் கும். ஆன்மீகச் சொற்பொழி வுகளும் அப்போது கோயில் திருவிழாக்களை ஒட்டி நடை பெறும். இவற்றை எல்லாம் மிக ஆர்வத்துடன் நடந்து போய்க் கேட்டு வருவேன். அப்போது என் நோக்கம், பள்ளியில் கட்டுரை -பேச்சுப் போட்டி களில் சேர்ப்பதற்கான நல்ல பாயின்ட்ஸ் கிடைக் குமே என்பதாகத்தான் இருந்தது.

ஊரிலேயே கிளை நூலகம் ஒன்று நல்ல புத்தகங் களுடன் இயங்கி வந்தது. அவற்றைப் படிக்கத் தொடங்கி னேன். வாசிப்பின் தொடக்க நிலை அது என்பதால், எல்லோ ரையும்போல நானும் அகிலன், சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, லக்ஷ்மி, தி.ஜானகி ராமன் என்றுதான் முதலில் படித்துக் கொண்டிருந் தேன்.

கேரளாவில் ஏ.கே.கோபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தில் பங்கேற்றவரான வாசு என்ற தோழர், தலைமறைவு வாசத்திற்காக எங்கள் ஊருக்கு வந்தார். அவர் மூலமும் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

1964-65ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தபோது, போலீசாரிடம் பிரம்படிபட்டேன். 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கு போட்டி யிட்ட திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய் வதற்குப் போனேன். ஒரு காரில் மைக் கட்டிக் கொண்டு பேசியபடி போனேன். 1967ல் திமுக வெற்றி பெற்றதும் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆனால் இரண்டே ஆண்டுகளில் எங்கள் பிரமைகள் உடைந்து போயின.

பிரமைகள் உடைபட்டதற்கான காரணம்..?

வேலையின்மைப் பிரச்சனையில் எனது சொந்த அனுபவமும் ஒரு காரணம். வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்று வரும்போது, பணம் கொடுக்காமல் எதுவும் நடக்கவில்லை. அந்த நிலையை எதிர்கொண்ட போது பிரமைகள் தாமாக உடைந்துபோயின. நான் க்ஷ.ளுஉ. ஆயவாள முடித்திருந்தாலும், எஸ்.எஸ்.எல்.சி. லெவலில் தேர்வு எழுதுவேன். வேலைக்குத் தேர்வுப்பட்டியலில் பெயர் வராது. கிராஜு வேஷன் லெவலில் எழுதியபோதும் அதே கதை. இப்படியான சூழ்நிலைகள் உருவான பொழுது, இவர்கள் உண்மையானவர்கள் இல்லை என்ற தெளிவு பிறந்தது.

பிறகு என்ன செய்தீர்கள்..?

வேலை தேடி பம்பாய்க்குக் கிளம்பினேன். எங்கள் ஊரில் நாங்கள் குத்தகைக்குப் பயிரிட்டு வந்த நிலங்களின் உரிமையாளர் அப்போது பம்பாயில் இருந்தார். அங்கே போனதும் கலெக்டர் அலுவ லகத்தில் ரூ.7 தினசரி சம்பளத்திற்குப் பணி செய் தேன். எங்கள் நில உரிமையாளர், ஹெச்.ஒய். பிராடி நிறுவனத்தில் கேஷுவல் லேபராகச் சேர்த்து விட்டார். அங்கேயும் ஆரம்பத்தில் அதே ஏழு ரூபாய் தினக்கூலிதான் சம்பளம்.

பம்பாய் வாழ்க்கை எப்படியிருந்தது?

தனிமை ஏக்கம், வீட்டு ஞாபகங்கள் நிறைந்த நோஸ்டால்ஜிக் மனநிலைதான்... ஹெச்.ஒய். பிராடி நிறுவனத்தில் அப்போது எனக்கு வேலை கொஞ்சம் குறைவுதான். அதனால் பொழுதைக் கழிக்கப் புத்தகங்கள் படிப்பது வாடிக்கை. வாசிக்கப் புத்தகங்கள் வேண்டுமே என்பதற்காக பம்பாய்த் தமிழ்ச்சங்கத்திற்கு மாலை நேரங்களில் போய்விடுவேன். அங்கு உறுப்பினராக என்னைப் புலவர் கலைக்கூத்தன் சேர்த்துவிட்டார். அங்கேதான் எனது வாசிப்புப் பசிக்குச் சரியான தீனி கிடைத்தது. தமிழ்ச்சங்க நூலகத்திலிருந்து புத்தகங் களை தினசரி 2 என்ற அளவிற்குக் கூட எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊரான வீர நாராயண மங்கலத்தில் எனக்குப் படிக்கக் கிடைக் காத பல நல்ல, நவீன இலக்கியப்பிரதிகள் பம் பாய்த் தமிழ்ச்சங்க நூலகத்தில் கிடைத்தன. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் - இப்படியான பல படைப்பாளிகளை வாசித்தேன். ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட்... எங்கே போனா லும் படிப்பு...படிப்பு... இதேதான் வேலை. வீட்டு ஞாபகங்கள் அதிகமாக மேலோங்கும் போது, என் கண்களில் நீர் நிரம்பித் ததும்பும்... இம்மாதிரியான ஒவ்வொரு சமயத்திலும் விக்டோரியா டெர்மினஸ் (இப்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) ரயில்நிலையத்திற்குப் போய்விடுவேன். அங்கே பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு சென்னைக்குப் புறப்படும் ஒவ்வொரு ரயிலையும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பேன். பிரயாணிகளையும், ரயிலையும் பார்க்கையில் நானே சென்னைக்குப் பயணமாவது போல ஏதோ ஒரு வகையான மனநிறைவு ஏற்படும். அது ஒரு மாதத்திற்குத் தாங்கும்...

இந்தச் சூழ்நிலையில் 1979ல் திருமணம் நடந்தது. அப்போது 790 ரூபாய் சம்பளம். எனக்குக் கம்பெனியில் விற்பனைப் பிரிவுக்குப் பதவி உயர்வு கொடுத்தார்கள். அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. செலவுக்கும் முன்பணமாகக் கிடைத்து விடும். நான் வெளியூர்களுக்குப்போய் மில்களில் நிர்வாகிகளைச் சந்தித்து, நிறுவனத்திற்கு ஆர்டர்கள் வாங்கி வருவேன். அந்த மாதிரிப் பயணங்களில் இந்தியா முழுவதிலும் சென்று வந்தேன்.

தங்குமிடம், உணவிற்காக மிகக்குறைந்த செலவு பிடிக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்வேன். போகிற ஊர்களில் என்னென்ன பொருள்கள் வீட்டு உபயோகத்திற்கு மலிவாகக் கிடைக்கும் என்ற விவரம் எனக்கு அத்துபடியாக இருந்தது. பண் ருட்டிப் பக்கம் போனால் பலாப்பழம், நாக் பூருக்குப் போனால் வெங்காயம், இப்படியே பருப்பு வகைகள், கருத்த மொச்சை, கருத்த கொள் - எங்கள் பக்கத்தில் காணம் என்பார்கள் - இப்படி மலிவாகக் கிடைப்பதை எல்லாம் பை நிறைய வாங்கி வருவேன். வாழைக்காய் வாங்கப் போனால், வாழைத்தாரிலிருந்து உதிர்ந்த காய் களைக் கூறுகட்டி விற்பார்களே. அது மாதிரிப் பார்த்து வாங்குவேன். இப்படியாகச் சிக்கனமாக இருந்து பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். என் செலவுகள் குறைவு. புத்தகங்கள் வாங்குவதில் மட்டும்தான் கொஞ்சம் செலவாகும்.

இந்த மாதிரியான ஓயாத பிரயாணங்கள், திட்டமிடல்களுக்கு நடுவே, படைப்பாக் கத்தின் மீது எப்படி கவனம் திரும்பியது?

ஒரு முறை, வட இந்தியாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். சாப்பிட நேரம் கிடைக்கவில்லை என்பதால் பார்சல் வாங்கி வைத்திருந்தேன். அதை ஒரு ரயில்நிலையத்தில் வண்டி நின்றபோது பார்சலைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினேன். அந்த நிலையத்தில் ரயிலில் ஏறிய ஒரு பெரியவர் என்னையும், என் கையிலிருந்த பார்சலையும் பார்த்தார். அவரது பதற்றத் திலிருந்தே அவர் பசியுடன் இருந்தார் என்பது தெரிந்தது. என் பார்சலில் கொஞ்சம் ரொட்டிகள் மீதியிருந்தன. பசியாலும், பதட்டத்தாலும் நடுங் கும் உடலோடு அவர் என்னைப் பார்த்து, “ழயஅஅi முயயயேயச! முயஅஅi முயயயேயச!” என்றார். “நாம் சாப்பிட லாம்...!” என்பது தான் ‘ஹாமி கானார்’ என்று அவர் சொன்னதற்கு அர்த்தம். ‘எனக்குப் பசிக்கிறது, கொஞ்சம் ரொட்டி கொடு...’ என்று அவர் கேட்க வில்லை. வேறு எதையும் யாசிக்கவுமில்லை. ‘நாம் உண்போம்’ என்று ஒலித்த அந்தக்குரல் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. யோசித்துக் கொண்டேயிருந்தேன். அவர் ஏன் அந்த மாதிரி பசித்த வயிறுடன் வந்தார்? அவருக்கு மகன், மகள், மருமகன், மனைவி - யாருமில்லையா...? இப்படி உள்ளேயே கிடந்து ஊறிய கேள்விகள் தாம் - சின்னத்தம்பியா பிள்ளையை, அவரது இரண்டு மகள்களை, பிள்ளையின் அமாவாசை விரதத்தை, பசிக்குச் சாப்பிட ஏங்கி இரண்டு மகள்களின் வீடு களுக்கும் அவர் அலைந்ததை, குளித்து முடித்துத் திருநீறணிந்துவிட்டால் அவர் சாப்பிட்டு விட்டதாக அர்த்தம் என்பது ஊர் முழுக்கப் பிரசித்தமாகி விட்ட நிலையில், அந்தப் பிரசித்தமே அவரது பசிக்குப் பகையாகி விட்டதை, ஆயாசத்துடன் அவர் வீட்டிற்கே திரும்பி பழைய சோற்றுப் பானை யிடமே சரணடைந்து ஊறுகாயைத் தேடியதை - ‘விரதம்’ கதையாக வெளிப்பட்டு வந்தது. இது 1972ல் தீபத்தில் பிரசுரமானது. இலக்கியச் சிந்தனை யின் பரிசையும் பெற்றது.

இதுதான் அச்சில் வந்த முதல் கதையா? வேறு ஏதேனும் வகையான எழுத்து கள் அதற்கு முன் நீங்கள் எழுதி அச்சில் வந்திருக்கின்றனவா?

பம்பாய்த் தமிழ்ச்சங்க இதழ் ஒன்று ‘ஏடு’ என்ற பெயரில் வந்தது. அதற்கு, புலவர் கலைக் கூத்தன்தான் ஆசிரியர். 32 பக்க இதழ் அது. பாதிப் பக்கங்களில் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் - புகைப்படங்களும் இடம்பெறும். மீதிப் பாதிப்பக்கங்களில் தமிழ்ச்சங்கத்திற்கு வரும் அறிஞர்கள் ‘ஏடு’ இதழுக்கு அனுப்பும் கட்டுரைகள் வெளியாகும். இந்தக் கட்டுரையாசிரியர்கள், 64 பக்க அளவிற்குக் கூட தங்களின் கட்டுரைகளை எழுதி அனுப்பியிருப்பார்கள். இப்படி அனுப்பிய வர்களுள், மறைந்த க.த.திருநாவுக்கரசு, வை.இரத்தினசபாபதி, ந.சஞ்சீவி ஆகியோரின் கட்டுரைகளைகூட ‘ஏடு’ இதழில் 4 பக்கங் களுக்குள் சுருக்கி நான் போடச்செய்திருக்கிறேன். இதைச் செய்தது ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

தலைகீழ் விகிதங்கள்’ - உங்களின் முதல் நாவல். அதில் இருந்த எதார்த்தவாத எழுத்து இப்போது எடுபடாது; எதார்த்த வாதம் செத்துப்போய் புதைகுழிக்கே போயாகிவிட்டது. இன்றைய எழுத்துக்களின் காலம் - நவீனத்துவம், பின் நவீனத்துவம், நான்லீனியர் ரைட்டிங் போன்ற நவீன வகை எழுத்துகளின் காலம் என்கிறார்கள். இதுபற்றி யெல்லாம் நிறைய சர்ச்சைகள்..! உங்களின் பார்வையில், ஒரு தேர்ந்த படைப்பாளியின் அனுபவத்தில் இந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

எதார்த்தவாதம் சாகவில்லை; சாகவும் சாகாது. அது செத்துப்போய்விட்டது என்கிறவர் களின் படைப்புகள் தமிழிலக்கியப் பரப்பில் எத்தனை பெரிய வெற்றிகளைச் சாதித்துவிட்டன? என்னைப் பொறுத்தவரை, மனிதர்களின் உண்மை யான உணர்வுகளை நியாயமான உணர்வுகளை, சரியான - பொருத்தமான மொழியில் தருவதுதான் இலக்கியம். எதார்த்த இலக்கியம் ஒரு புள்ளியில் துவங்கி அதிலேயே முடிந்துவிடும் வட்டம் அல்ல. அது ஒரு புள்ளியில் தொடங்கி மேலே - மேலே சுழன்று ஏறிச்செல்லும் ‘ஸ்பைரல்’- அதாவது வளைந்து வளைந்து மேலேறும் மாடிப்படிக் கட்டுகள்போல. ஒரு படைப்பாளிக்கான மூல தனம், இந்த மண்ணும் அதில் வாழும் மனிதர் களும்தான்..! நமது மக்களின் நேயம்... பிரசவமான பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கென்று மீன் கேட்டால், அவளுக்குப் பால் அதிகமாகச் சுரக்கச் செய்யும் மீன் வகைகளைத் தமது ‘மடி’(வள்ளம்) யிலிருந்து கடல்மீன் குவியலில் தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு, காசு வேண்டாம் என்கிற மீனவர் கள்... தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களை யும், பனைமரத்துப் பதநீரையும், தோட்டத்து மரங் கள் - செடிகொடிகளிலிருந்து காய்கறிகளையும் இலவசமாகவே கேட்கிறவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிற மக்கள். பசிப்பதற்றத்துடன் வரும்போது கூட, ‘எனக்குக் கொடு’ என்று கெஞ்சாமல், ‘நாம் உண்போம்’ என்கிற கிழவர்... இவர்களும், இம்மக்களின் இயல்பான உணர்வுகளும்தான் நமது மூலதனம். நம்முடைய சொந்த அனுபவங் களும் எழுத்தாக மாறுகையில், மொழிநடை, படைப்பாக்கும் திறன், உண்மை இவை யெல்லாம்தான் கிரியேட்டிவிட்டிக்கான பலங்கள். எவ்வளவு திறமைக்குறைவான வகையில் எழுதப் பட்டிருக்கக்கூடிய படைப்பிலும்கூட ஒரு வாழ்வுண்மை இருக்கும். எதார்த்தவாதத்தைக் கைவிட்டவர்கள் மீண்டும் இன்று அதே இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். பூமணி, வண்ண நிலவன், வண்ணதாசன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், டி.செல்வராஜ், சின்னப்பபாரதி - இவர்கள் எல்லோரும் எதார்த்தவாதப் படைப்பாளி கள்தானே?

காலமாற்றத்திற்கேற்ப, நவீன உத்திகள் பயன்படுத்தப்படுவதுதானே சரியாக இருக்கும்? பழைய, தேங்கிப் போன எழுத்துக் களை இன்னமும் அதேமொழியில், உத்தியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு பற்றி...

எந்தப் புதிய உத்தியும், அதற்கான தேவை யைப் பொறுத்துத்தான் எந்த ஓர் இடத்திலும் எடுபடும். எனக்கு அது அவசியமென்றால், அது என்னிடம் எப்படியும் வந்து சேரும். இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் உத்திகள், அந்த நாடுகளின் மக்கள் பிரச்சனைகள், சூழலைப் பொறுத்து அந்த இலக்கியங்களுக்குப் பயன்படும். அதே உத்திகள் அப்படியே இங்கே எடுபடுமா? நமது மக்களின் வெளிப்பாட்டு உத்திகள் வேறு வகையானவை.

என் படைப்புகளைப் பொறுத்தவரை, 30 வருடங்களாக நான் எந்த வகையிலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தலைகீழ் விகிதங்களில் தொடங்கிய என் மொழி இன்று அதே மாதிரி இருக்காது. ‘மிதவை’ நாவலில் எதார்த்தவாதமும் - நவீனத்துவக் கூறுகளும் கலந்தேயிருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் ‘இன்ன வடிவத்தில்தான் எழுதுவேன்’ என்று திட்டமிட்டு அப்படியே எழுதவில்லை. தலைகீழ் விகிதங்களை இன்று நான் எழுதினால், அதே மொழியில், அதில் பயன்படுத்திய அதே சொல்லாடல்களில் இன்று அதை எழுதமாட்டேன். கால ஓட்டத்திற்கேற்ப, நானும் மாறி நகர்ந்து கொண்டேதான் வந்திருக் கிறேன். எனது மொழியும் மாறித்தான் வந்திருக் கிறது..! பின் நவீனத்துவ மொழியில் எழுத முடியும் என்று திட்டமிட்டு, பரிசோதனை முயற்சிகள் செய்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவற்றில் எத்தனை படைப்புகள் மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன?

எந்தெந்த அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களுக்காக இலத்தீன் அமெரிக்க எழுத்தா ளர்கள் மாஜிக்கல் ரியலிசம் என்ற உத்தியைத் தேடிப் போனார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். மேற்குலகில் அவர்களின் மொழியிலக்கணத் திற்கேற்ப யீடிளவ அடினநசnளைஅ என்றொரு வகைப் பாட்டைக் கொண்டதை அப்படியே நாம் பின் - நவீனத்துவம் என்று மொழி பெயர்ப்பது சரியா; கட்டுடைத்தல் என்று நமது மண்ணையும் - மக்களையும் - வாழ்முறைகளையும் பண்பாட்டை யும் சார்ந்த படைப்புகளை மேற்கத்திய இலக்கிய அளவுகோல்களின்படி உடைத்துக் கொண்டு போனால் - என்ன மிஞ்சும்? - இதையெல்லாம் யோசிக்காமல் நாம் அப்படியே எந்த நவீனக் கோட்பாட்டையும் திணிக்கக்கூடாது. இப்படி யான நவீன உத்திகளை வலியுறுத்துகிறவர்கள், தங்களின் கல்விப் புலமையை, நுண்ணறிவுத் திறனை வெளிப்படுத்திக் காட்டுவதற்குத்தான் அப்படிச் செய்கிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை யில்லை. க்ரியேட்டிவிட்டி என்பது வெறும் டெக்னிகாலிட்டி மட்டுமல்ல. சமீபத்தில் வந்த கண் மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ எஸ். செந்தில்குமாரின் ‘முறி மருந்து’ இரண்டையும் படித்துப் பாருங்கள். வெறும் உத்திகளில் இல்லை இலக்கிய வெளிப்பாட்டின் ஜீவன் என்பது தெரிய வரும். சு.nணுகோபாலின் ‘கூத்தப்பனை’ படித் தேன். இந்த படைப்புகளைப் படிக்கையில் வாழ்க்கையைப் படிப்பதாகத் தோன்றுகிறது. எழுதுகிறவர்கள், சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும். படைப்பு தானே வசமாகும். ஆனால் வாழ்க்கை அனுபவங்களைக் கலையாக்கு வதில் பல படித்தரங்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தாளருக்கும் அவருடைய கல்வி, அனுபவங் கள், வாழ்க்கைச்சூழல்... இவற்றைப் பொறுத்து பல லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. அதையும் மனதிற்கொண்டுதான் ஒரு படைப்பாளியை மதிப்பிட வேண்டும்.

சமீபகாலத்தில் கட்டுரைகளில் அதிக மான கவனம் செலுத்துகிறீர்கள், இல்லையா? ‘தீதும் - நன்றும்’ கட்டுரைகளில், குறிப்பாகப் பெண் மாணவிகளின் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளின் பிரச்சனைகள் பற்றி, இன்றைய சமூக நிகழ்வுகள், அரசியல், மொழி, இலக்கியம், மரபு - என சகல துறைகளிலும் உள்ள பிரச்சனைகள் பற்றி மிகச் செறிவான கட்டுரை களைத் தந்திருக்கிறீர்கள். ‘தமிழினி’யில் ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ பற்றியும், கண்மணி குண சேகரனின், ‘நெடுஞ் சாலை’ பற்றியும் கட்டு ரைகள் எழுதியிருக்கிறீர் கள். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

கட்டுரைகள் எழுதும்படி நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதினேன். அவற்றுக்கு வந்த எதிர்வினைகள் எனக்குத் தைரியம் தந்தன. சொல்லுவதற்கும் எனக்கு விஷயங்கள் இருக்கின்றன. நாஞ்சில் நாட்டு உணவு வகைகள், நானறிந்த எங்கள் ஊர்த் தாவரங்கள் பற்றி யெல்லாம் சொல்ல முடியாமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஓரளவிற்கு இப் போது பதிவு செய்து விட்டேன். இனியும் சொல்ல வேண்டியிருக்கிறது.

‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி’ ஒன்றைத் தயாரியுங்கள் என்று ‘கரிசல் வட்டாரச் சொல்லகராதி’ தந்தவரான கி.ராஜநாராயணன் ஒரு சமயம் என்னிடம் சொன்னார். 3000 சொற்கள் வரையில் சேகரித்தேன். பிறகு அதைத் தொடர என்னால் முடியவில்லை. ‘கீணுதல்’ என்ற சொல் ஒன்றை அறிந்தேன். அது முந்திரிப்பழத்தை, காயை - இரண்டாகப் பிளப்பது பற்றியது. அந்தச் சொல் அறிமுகமான பின்தான் ‘புள்ளின் வாய்க் கீண்டானை’ என்ற பாசுரத்தின் பொருளை, அந்தச் சொற்பிரயோகத்தின் அழகை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘புத்திமுட்டு’ என்று இன்னொரு சொல். சிரமமாயிருக்கிற ஒரு நிலையைச் சொல்லுவது. இப்படி எத்தனையோ... வாழ்வனுபவங்களைச் சொல்லவும், பதிவு செய்யவும் நமது சொற்களஞ்சியத்தில் ஏராளமுண்டு. எங்கள் மாவட்டம் திருவனந்தபுரத்தை ஒட்டியிருப்பதால் மலையாளச் சொற்கள் நிறைய எங்கள் பேச்சில் விரவிவரும். அவற்றில் பலவும் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்கள்!

இசையார்வம் உங்களுக்கு உண்டு அல்லவா? உங்களின் ‘தாளம்’ கதையில் வருகிற தவுல் வித்வான் மீது கடைசியில் கொஞ்சம் சலுகை காட்டியிருக்கிறீர்கள். கோபப்பப்பட வேண்டிய அளவிற்குக் கோபம் பூரணமாக வெளிப்படவில்லை போல் தோன்றுகிறதே..?

ஆமாம் ! நீங்கள் சொல்வது சரிதான்! அந்தக் கதையின் முடிவில், மகா கலைஞனான அந்தத் தவுல் வித்வானின் மீது கருணை காட்டும்படிதான் ஆகி விட்டது. கலைஞர்களுக்கு என்று சில செம்மார்ந்த பண்புகள் உண்டு. 6000 ரூபாய்க்கு சபாவில் பாடு வதற்கு ஒப்புக் கொள்கிற சில இசைக்கலைஞர்கள், ஒரு லட்ச ரூபாய் தர முன் வந்தாலும் கல்யாண வீட்டு நிகழ்ச்சிகளில் பாட மறுத்து விடுகிறார்கள். கவர்னர், படைத்தளபதிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வின் போது, உஸ்தாத் பிஸ்மில் லாகான் ஷெனாய் வாசிக்க, அல்லா ரக்கா தபலா. வாசிப்பதற்குத் தொடங்கிய பிறகும் சபையில் சளசளவென்ற பேச்சுச் சத்தம். மூன்று முறை சொல்லியும் கூட்டம் அமைதியைப் பராமரிக்கவில்லை. பார்த்தார் உஸ்தாத்; சட்டென்று ஷெனாயை உறையில் போட்டு மூடி எடுத்துக் கொண்டு சபையிலிருந்து வெளியேறி விட்டார். இங்கே அதிகாரத்தில் இருப்பவர்களின் உறவினர்கள் வந்தாலே எழுந்து நிற்கிறார்கள். பிஸ்மில்லாகானின் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்? ‘தாளம்’ கதையின் வித்துவான், கலைஞனுக்கே உரிய பலவீனத்தினால் சிறு பையன் மேல் தன் ஆத்திரத்தைக் காட்டிவிட்டார் என்று எடுத்துக்கொண்டேன். கலைஞனின் பலவீனமான இடங்களில் இம்மாதிரி சறுக்கல்கள் நேரலாம். என்ன செய்வது?

இசையில் ஆர்வம் அதிகம்தான் எனக்கு. எங்கள் பக்கத்துத் தாளவாத்தியங்கள் - பம்பை, முரசு இரண்டும் ஒன்றாக இருக்கும். எல்லாச் சிறுதெய்வ வழிபாடுகளிலும் இது உண்டு. தப்பு வகையில் மகுடம் என ஒன்றிருக்கிறது. இதுபோல் பல வகை உண்டு. நம்மில் தாளலயம் சார்ந்த ரசிப்புத்தன்மை இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. நேற்று ஏர்வாடியில் நான் பார்த்த ஒரு சிறுவன் - தன் தொடைகளில் இரண்டு கைகளையும் தட்டிக்கொண்டு போட்ட தாளம் ஆச்சரியத்தைத் தந்தது.

தலைகீழ் விகிதங்கள்’ நாவல், ‘சொல்ல மறந்த கதை’ யாகத் திரைப்பட வடிவில் வந்தது. அது திரைப்படமான விதத்தில் உங்களுக்கு முழு மனநிறைவு உண்டா?

எனது நாவல் தரும் வாசிப்பு அனுபவத்தை அதே அளவிற்குத் திரைப்படம் தரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றம்தான் கிடைக்கும். ஏனென்றால் சினிமா மொழி வேறு. அது முற்றிலும் வேறான ஓர் ஊடகம். மொத்த நாவலிலிருந்து சில நுணுக்கமான இடங்களையும், கருவையும் மட்டும் எடுத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற காட்சிகளைக் கட்டி எழுப்பிக் கொள்கிறார்கள்.

சமகால எழுத்துகளின் உள்ளடக்கமும், போகிற திசைவழியும் பொதுவாக சரியாக இருக்கின்றனவா?

சமகால எழுத்துக்களின் உட்பொருள் காமம் மட்டுமே என்பது மாதிரியான ஒரு நிலை இருக்கிறது. பெண்கள் நன்றாகவும், நிறையவும் எழுதுகிற காலம் இது. ஆனால் பெண் எழுத்தின் பாடுபொருள் அவர்களின் உடலும், உடல் அரசியலும் மட்டுமே என்றாகிவிட்டது போல் தோன்றுகிறது. இதைத் தவிர பெண்களுக்கு வேறு எந்தப் பிரச்சனையுமே இல்லை என்றா அர்த்தம்...? அவர்கள் ஏன் தங்களின் கவிதைகளின் உள்ளடக்கம், சொல்லாடல்கள் இவற்றைப் பெண்ணுடலோடு மட்டுமே ஏன் குறுக்கிக் கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில் சமூகப் பிரச்சனைகள், பண்புகளின் சீரழிவு, சமூக மட்டங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை எந்தப் பயனையும் பெறாமல் போவது, விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக் கும் பொருட்களுக்கெல்லாம் உரிய நியாயமான விலைகள் கூட கிடைக்காமல் இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பது - இப்படி எத்தனையோ நடக்கின்றன. 45 நாட்களுக்கு ஒருமுறை வெட்டி லாரிகளில் லோடு ஏற்றி அனுப்பப்படுகிற தேங்காய்களுக்குப் பணம் அடுத்த தேங்காய் வெட்டின்போதுதான் கிடைக்கிறது. ஒரு கோட்டை நெல்லின் விலை 600 ரூபாய்தான். அதுவும் உடனே கிடைப்பதில்லை. விவசாய உற்பத்திப் பொருட்கள் எதற்குமே எத்தனையோ வருடங்களாகியும் விலைகள் உயரவே இல்லை. விவசாயியோ - சாதாரணத் தொழிலாளியோ உலகமயமாக்கலால் எந்தவிதப் பயனையும் பெற்றுவிடவில்லை. இதுபற்றியெல்லாம் யாரும் யோசிக்காமல், உடலும் - உடல்சார்ந்த உணர்வு களும், மன உளைச்சல்களும், ஆழ்மன விகாரங் களும்தான் நவீன இலக்கியத்திற்கான பாடு பொருள் என்று எழுதிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

முற்போக்கு இலக்கிய வட்டார எழுத்தாளர்களின் மீது “இவர்கள் வெறும் முழக்கங்களையே கவிதைகள் என்கிறார்கள். வெற்றுப் பிரச்சாரக் கதைகளைத்தான் எழுது கிறார்கள். இவர்கள் யாரும் எதையும் படிப்பது கிடையாது. இவர்கள் எழுதும் எந்த ஒரு வரியும் இலக்கிய மதிப்புடையவை இல்லை. எல்லாம் வெறும் அரசியல் துண்டுப் பிரசுரங்கள் அல்லது அறிக்கைகள்...” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இது எந்த அளவிற்குச் சரி? உங்கள் கணிப்பில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளின் நிலை என்ன?

இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த சர்ச்சை புதியதுமல்ல. ரொம்ப நாளாய் நடப்பதுதான். கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் - லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் இருப்பதுபோல, படைப் பாளிகளிலும் பல படித்தரங்களில்தான் இருக்கிறார் கள்; இருப்பார்கள்.

ராஜம் கிருஷ்ணனையும், அம்பையையும் - இந்த இரண்டு பேரின் எழுத்துகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டையும் கணக்கிலேயே எடுக்காமல் தடாலடியான முத்திரை குத்திவிட முடியாது. நான் வாசித்த வரையில், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன், வேல.ராமமூர்த்தி, உதயசங்கர், இலட்சுமணப்பெருமாள், காமுத்துரை - இப்படிப் பலரும் நன்றாகவே எழுதுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும ஒரே கோட்டிற்குள் அடக்கிவிட முடியாது.

முழக்கங்களாகவும், அறிக்கைகளாகவும் படைப்புகள் வந்தால் அவற்றை விமர்சிக்கத்தான் வேண்டும். ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவதை யார் செய்தாலும் அது தவறுதான். கலைத்தரமில்லாத ஒரு படைப்பு, எவ்வளவுதான் முற்போக்கான உள்ளடக்கத்துடன் இருந்தாலும் அது மக்களைக் கவராது. அதே சமயம் வெறும் கலைத்தரம் மட்டுமே இருந்து உள்ளடக்கம் உயிரற்றதாக இருந்துவிடும் பட்சத்தில் அந்தப் படைப்பும் பிரயோசனப்படாது. இதுதான் எனது அணுகுமுறை.

உங்கள் படைப்புகளின் தலைப்புகள், கட்டுரைகளில் விரவி வருகிற பல சொற்கள், மேற்கோள் காட்டுகிற பாடல் - கவிதை வரிகள் யாவும் சங்க இலக்கியச் சொல்லாடல் களைப் போன்ற கவித்துவ அழகுடன் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, இப் போது சாகித்திய அகாடமி விருது பெற்றி ருக்கும் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப் பின் தலைப்பு. அதேபோல ‘நஞ்சென்றும் - அமுதென்றும் ஒன்று...’, ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘எட்டுத் திக்கும் மத யானை’... இப்படியாக... இதற்கு என்ன காரணம்?

இதைக் காரணத்தோடுதான் செய்கிறேன். எனக்கு என் படைப்புகள் குறித்த ஒரு செம்மார்ந்த பெருமிதம் உண்டு. வாசகரை என் புத்தகத் தலைப்புகள் கவர வேண்டும். அது என்ன அர்த்தத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று யோசிக்கச் செய்ய வேண்டும். யோசித்து வாசகர் உள்ளே வர வேண்டும். அவரை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவரும் ஓர் இண்டலக் சுவல்தான். தலைப்புகளே வாசிப்பு சுகத்தைக் கொடுக்க வேண்டும். அழகியல் உணர்வுடன் வாசகனுக்கு வித்தியாசமான உணர்வைத் தர வேண்டும். பசிப்பதற்றத்துடன் வந்த அந்தப் பெரியவர்கூட ‘நாம் உண்போம்’ என்றுதானே சொன்னார். இந்த உணர்வின் அடிப்படையில்தான் என் புத்தகத் தலைப்புகள் இப்படி அமைந்திருக் கின்றன.

ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா? உண்டென்றால் அது எந்த வகை யான ஆன்மீகம்?

நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல, தொடக்க காலத்தில் என் கருத்துகளின் மீது தாக்கம் செலுத்தியவை - திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும்தான். நான் நாத்திகனாக இருந்த காலத்தில் கூட கோயில்கள் மீது மிகுந்த ஈடுபாட்டுடன்தான் இருந்தேன். அதற்குக் காரணங்கள் மூன்று. ஒன்று, அந்தக் கோயில்களின் கட்டிடக் கலை, சிற்பக் கலை அழகுகள்; இரண்டாவது - அந்தந்தக் கோயில்களின் மீது பாடப்பட்ட ஆழ்வார்கள் - நாயன்மார்களின் பாடல்கள்; மூன்றாவது - அந்தந்தக் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் - அதாவது உணவு வகைகள்! இப்போது - நான் ஆன்மீகத்தை எப்படிப் பார்க்கிறேன் என்றால், நிறுவனமயப்பட்டதாக அல்ல.

சக உயிர்கள், சகமனிதர்களின் மீதான அன்பும் - நேசமும்தான் பிரதானம் என்பதே என் ஆன்மீகம். எல்லா மத இலக்கியங்களும் போதிப்பது அன்பு ஒன்றை மட்டும்தான். யாவரையும், யாவற்றையும் நேசிக்கச் சொல்வது அந்த அன்பு. அன்பை முன்னெடுப்பது எனது நோக்கம். மனிதர்களாகிய நாம், நமது பிரச்சனை களின் தீர்வுக்காக ஏதாவது ஒன்றின் மீது பற்று வைக்கிறோம். ‘பக்தி’ என்பதே ‘பற்று’ என்பதைத் தானே குறிக்கும்? ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்கிறது குறள். நிறுவனமயமாகி வரும் ஆன்மீக வாதிகளின் செயல்கள் பற்றி எனக்கு இப்போதும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.

நான் எழுதிய ‘மண்ணுள்ளிப் பாம்பு’ கவிதை இதைப்பற்றித்தான் பேசுகிறது. நான் கிறிஸ்துவர்களின் தேவாலயத்தில் இருக்கும்போது, இந்துவாகவும், முஸ்லிமாகவும் உணர்கிறேன். இந்துக்கோயிலில் இருக்கையில் முஸ்லிமாகவும், கிறிஸ்தவனாகவும் உணர்கிறேன். முஸ்லிம்களின் கோயிலில் இருக்கையில் கிறிஸ்தவனாகவும், இந்துவாகவுமே உணர்கிறேன் - என்பது தான் கவிதையின் உட்பொருள். எங்கே நான் நிற் கிறேனோ அங்கே இருப்பவர்களுடன் ஒரு வகை யில் நான் ஒன்றவில்லை. அங்கு இல்லாத அந்த ‘மற்றவர்களுடன் தான் நான் ஒன்றுகிறேன் என்று பொருள்.

‘ஒருவரை நாம் வெறுத்தால், அவரை நாம் புரிந்து கொள்ள முடியாது’ என்பார் நகுலன். ஆன்மீகம் எனக்கு ஃபேஷன் அல்ல. அது அன்பு நெறி. இந்த முடிவிற்கு நான் வருவதற்கு பல ஆசிரியர்கள் - குருக்கள் இருக்கிறார்கள். திருமூலர் ஓர் ஆசிரியர். சமகாலத்தில் ரஜனீஷ் உட்பட பலர். 1000 பேரில் ஒரு நூறுபேரைப் பக்குவப்படுத்துவது தான் சாத்தியம் என்றால், அதற்கு இந்த ஆன்மீக வாதிகள் உதவுகிறார்கள் என்றால் அதில் என்ன ஆட்சேபணை நமக்கு?

நிறைவாக, இப்போது என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? ‘செம்மலர்’ வாசகர் களுக்கு உங்கள் செய்தி என்ன?

நான் இப்போது என் 63-வது வயதில் இருக்கிறேன். ஏற்கெனவே செய்து வந்த சில படைப்புப் பணிகளின் கிளைகளை வெட்டிவிட்டு, சிலவற்றைச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. ‘நாஞ்சில் நாட்டு உணவு வகைகள்’ பற்றி 300 பக்க அளவிற்குப் புத்தகம் வளர்ந்துவிட்டது. ஆனால் திருத்தி நகல் எடுக்கும் பணியில் 110 பக்கம்தான் முடிந்திருக்கிறது. அதேபோல் என் கிராமத்து வாழ்க்கைச்சூழலில் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையையும் இணைத்து ஒருநாவல் எழுதத் திட்டமிருக்கிறது. பிறகு - கட்டுரைகள் கேட்கிற வர்களுக்கு எழுதுவதையும் தொடர வேண்டி யுள்ளது. இதுபோல் சில திட்டங்கள்...

நன்றி : கீற்று.

Sunday, January 23, 2011

ரஹ்மான் வருகைக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன்.

கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி.


மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும் கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் லையர் என்பது ஓர் இசைக்கருவி. ஏழு நரம்புகள் கொண்ட யாழ் என்பது அதற்குப் பொருள். கிரேக்கத்தின் வீதிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இசைக்கருவியை வைத்துக்கொண்டு தன்னுணர்ச்சிகள், தன் சோகம், தன் காதல், தன் வெற்றி, தன் துயரத்தை தெருமுனைகளில் பாடகர்கள் பாடி வந்திருக்கிறார்கள். இந்த ‘லையர்’ என்ற தன்னுணர்ச்சிப் பாட்டின் இசைக்கருவியிலிருந்துதான் லிரிக் பிறந்தது என்கிறார்கள். எனவே லிரிக் என்பது பெரும்பாலும் தன்னுணர்ச்சி என்று கருதப்படுகிறது. இந்த தன்னுணர்ச்சி என்பது பாத்திரத்தின் உணர்ச்சி என்று நிறம்மாறியது தமிழ்த் திரைப்படப் பாட்டில்.

எனவே ஒரு பாத்திரத்தின் காதல், பாத்திரத்தின் கண்ணீர், பாத்திரத்தின் வெற்றி, பாத்திரத்தின் தோல்வி, பாத்திரத்தின் வலி, பாத்திரத்தின் தத்துவம் என்பது அந்தப் பாத்திரத்தின் குரலாக ஒலிக்கிறது. சில நேரங்களில் பாத்திரத்தின் குரலுக்கும் கவிஞனின் குரலுக்குமான இடைவெளி குலைந்துபோவதற்கு வாய்ப்பிருக்கிறது. அல்லது கவிஞனின் குரல் எதுவோ அதுவே பாத்திரத்தின் குரலாக, அல்லது பாத்திரத்தின் வலி எதுவோ அதுவே கவிஞனின் வலியாக நேர்கிற சந்தர்ப்பங்கள் பலநேரங்களில் நேர்வதுண்டு. எனக்கு காதல் அனுபவத்தில் அப்படி நேர்ந்திருக்கிறது. உழைக்கும் மக்களின் துயரங்களைப் பாடும்போதெல்லாம் அதை எனது துயரங்களாக நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். கலப்பையின் நுனி, தன் காலில் பட்டால் பரவாயில்லை; மாட்டின் காலில் படக்கூடாது என்று கருதுகிற உழவர் சாதியைச் சேர்ந்தவன் நான். கலப்பையின் கொழுமுனை தன் காலில் பட்டுவிட்டால் விவசாயம் நிற்கப்போவதில்லை. மாட்டின் காலில் குத்திவிட்டால் அவனுக்கு நஷ்டம். எனவே தன்னைவிட மாடு உயர்ந்தது. இதனால்தான் மாடு என்பது செல்வம் என்று நினைக்கப்பட்டது.

எம்மாதிரியான நேரங்களில் உழைக்கும் மக்களின் வலி, வறுமையின் வலி, தன் முனைப்பு எல்லாம் பாடல்களில் வெளிப்படுகின்றன.

நான் மக்களைப் பார்த்து சில கருத்துக்களைச் சொல்ல வேண்டியிருக்கும். மனிதா மனிதா உன் விழிகள் சிவந்தால்... கனவு காணும் வாழ்க்கை யாவும்... புத்தம் புது பூமி வேண்டும்... சின்னச் சின்ன ஆசைகூட என் மனதில் இன்னும் சாகாமல் இருக்கிற குழந்தையின் குரல்தான். எல்லா பாடல்களும் அல்ல. சில பாடல்கள் எனக்கும் பாத்திரத்திற்கும் ஒத்துப்போது உண்டு.

பிரதமர் சந்திப்பையும் தவிர்த்துவிட்டு உங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் வருகைதந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்மீது அவர் கொண்டிருக்கிற காதல் என்று சொல்லலாம். ஒரு தமிழ்க் கவிஞன் மதிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கலாம். தமிழ்க் கவிஞன் என்பவன் சிறுபான்மை சாதியைச் சேர்ந்தவன். இந்த சிறுபான்மை சாதி மதிக்கப்படவேண்டும் என்பதற்காக முதல் அமைச்சர் அவர்கள் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம். அதனால் எங்கள் மதிப்பில் அவர் பெரிதும் உயர்ந்து நிற்கிறார். பிரதமரின் சந்திப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். முதல் நாள் தமிழுக்கு மதிப்பளித்த அந்த மாபெரும் முதல் அமைச்சர் மறுநாள் தன் கண் வலியையும் தாண்டி பிரதமரைச் சந்தித்துவிட்டார் என்கிறபோது பிரதமர் மதிப்பிலும் அவர் உயர்ந்து நிற்கிறார்.

ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீட்டு விழாவில், இனிமேல்தான் எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள், என்ன எழுதப் போகிறீர்கள்?

இனிமேல்தான் உலக இலக்கியம் எழுதப்போகிறேன். உள்ளூர் இலக்கியம் எழுதி வந்தேன். இனி உலக இலக்கியம். இந்த உலகம் என்ற பூபாகத்தில்தான் மனிதர்கள் வாழ்ந்து தீரவேண்டியிருக்கிறது. இதுவரைக்கும் நாம் சின்னச் சின்ன வட்டார இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தோம். இலக்கியம் என்பது மூன்று வகைப்படுகிறது. சமகால இலக்கியம், பிராந்திய இலக்கியம், உலகப் பொது இலக்கியம், இனி யுனிவர்சல் லிட்ரேச்சரை நோக்கி தமிழை நகர்த்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்கான களத்தில் இப்போது நான் நிற்கிறேன்.

பாடல்கள் இல்லாத படங்கள் வேம்டும் என்றும் பாடல்கள் படத்திற்கு சுமை என்றும் கமல்ஹாசன் போன்றோர் சொல்லி வருகிறார்களே? அதுபற்றி?

அந்தக் கருத்து முக்கியமான கருத்து. எல்லா கதைகளுக்கும் பாடல்களைத் திணிப்பது நியாயமில்லை. ஆனால் பாடல்கள் தேவைப்படுகிற கதைகளுக்கு பாடல்களை தவிர்ப்பதும் நியாயமில்லை. நாம் பாடல்களை மரபுவழியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியல்ல. சில படங்கள் பாடல்கள் வேண்டும் என்று கதறும். சில கதைகள் பாடல்களைத் திணிக்காதே என்று கெஞ்சும். நாம் கதறவும் விடக்கூடாது. கெஞ்சவும் விடக்கூடாது.

தீக்குச்சி உசரம் சிறுசுதான்... அந்த தேக்குமரக்காடு பெருசுதான் போன்ற உவமைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?

வாழ்க்கையிலிருந்துதான். மனசிலிருந்துதான் சிந்தித்துக்கொண்டே இருக்கிற பழக்கத்தில் இருந்துதான்.

கள்ளிக்காடு இதிகாசம் நாவல் ஏன் இன்னும் படமாக்கப்படவில்லை?

நல்ல கேள்வி. ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு படம் இருக்கிறது. அது வேறு வேறு படம். ஓர் இயக்குநர் ஒரு படத்தை எடுத்துவிட்டால் அந்த வட்டத்துக்குள் மட்டும்தான் அந்தக் காட்சி படிமம் திகழும். ஆனால் படிக்கிற வாசகன் ஒவ்வொருவனுக்கும் ஒரு காட்சிப் பிம்பம் இருக்கிறது. இருக்கும் வரைக்கும் அது அப்படியே இருக்கட்டும்.

உங்கள் படைப்பூக்கத்தை உயிர்ப்பித்துக்கொள்ள நீங்கள் நாடும் நூல்கள், ஆளுமைகள் யார்?

நூல்கள் என்று குறிப்பிட்டத் துறையை மட்டும் கற்றுக்கொண்டிருப்பது சுகமளிக்காது. நேரத்திற்கு ஏற்றவாறு வாசிக்கிறேன். மனநிலைக்கு ஏற்றவாறு வாசிக்கிறேன். பல்துறை நூல்களையும் நாடுகிறேன். இப்பொழுதெல்லாம் பொழுதைப் போக்குவத்குப் படிக்கவில்லை. பொழுதை ஆக்குவதற்குப் படிக்கிறேன்.

புதிய தலைமுறைப் பாடலாசிரியர்கள் முகிழ்த்திருக்கும் நிலையில், அவர்கள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

நல்ல திறமையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். திரையுலகம் என்பது எப்போதுமே தன் சமகாலத்தில் இருபது பேரையாவது வேலை வாங்கும், எல்லா காலகட்டத்திலும், பாபநாசன் சிவன் காலத்திலிருந்து இன்றைக்கு இருக்கிற வைரமுத்து காலகட்டம் வரைக்கும் எல்லா காலங்களிலும் இருபது முப்பது பேர் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதில் ஒருவன் நடத்திச்செல்வான். மற்றவர்கள் ஓடி வருவார்கள். நடத்திச் செல்கிறவனைத் தாண்டி «£டி வருகிறவன் ª£ரு புதிய பாணியை உருவாக்கி விட்டால், அவன் ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்குத் தலைமைதாங்குவான். இப்போது வருகிற பாடலாசிரியர்கள் நல்ல திறமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களது திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதைகள் இன்னும் கிட்டவில்லையே என்று என்னைப் போன்றவர்கள் ஆதங்கப்படுகிறோம்.

இளையராஜாவை விட்டுப் பிரிந்து மற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ரஹ்மான் அறிமுகம். அந்தச் சூழல் எப்படி இருந்தது?

ஏ.ஆர். ரஹ்மானை அறிமுகமானபோது முதல் பாட்டிலேயே ஒரு புதிய தலைமுறைக்குத் தலைமை தாங்குகிறவன் வந்துவிட்டான் என்ற நம்பிக்கையை நான் பெற்றேன். அது வெறும் அவமானத்தால் வந்ததல்ல. அவருடைய அதீத திறமையால் வந்தது. ரஹ்மான் போன்ற ஒருவரின் வருகைக்காக நான் ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். என் காத்திருப்பு வீண்போகவில்லை.

தமிழிடமிருந்து நீங்கள் கற்றதும் பெற்றதும் என்ன? தமிழுக்கு நீங்கள் அளித்தது என்ன?

தமிழ்தான் எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் அதீதமான வார்த்தைகளாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். வாழ்க்கை சொல்லிக்கொடுக்கிறது. மொழி பதிவு செய்யும் ஊடகமாக இருக்கிறது. வாழ்க்கை சொல்லிக் கொடுத்ததை வாங்கிவைத்துக் கொள்ளக்கூடிய மொழிக்கு நன்றி சொல்கிறேன். வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது. நான் எழுதுவதை தமிழ் பெற்றுக்கொள்கிறது.

தமிழ்மொழியின் சிறப்பாக சங்க இலக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறோம். பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்கு அதன் நவீன மொழியும் ஒரு காரணம். நவீன தமிழின் சிறப்பாக எதைச் சொல்வீர்கள்?

நவீன தமிழின் சிறப்பு எதையும் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய அதன் பெருந்தன்மை. இன்னொன்று எதையும் செரித்துக்கொள்ளக்கூடிய அதனுடைய பாரம்பரியமிக்க வயிறு.


நன்றி - சுந்தரபுத்தன்- தி சண்டே இண்டியன்

Saturday, September 15, 2007

வணக்கம்