
சீனாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 90 பேர் இறந்தனர். 1.27 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
சீனாவின் 4 மாகாணங்கள் அங்கு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த வெள்ளத்துக்கு 50 பேர் பலியாகியுள்ளனர். 1,27,000 பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவாக 300 மி.மீ அளவுக்கு மழை பெய்ததால் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மின்சாரம், தொலைபேசித் தொடர்புகள் வெள்ளத்தினால் துண்டிக்கப் பட்டுள்ளன. கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாயின.ஆறுகளின் கரைகள் உடைந்து சுற்றுப்புறப் பகுதிகள் மூழ்கியுள்ளன. போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை 25 பேர் இறந்தனர். ஸியானிங் நகரத்தின் டாங்செங் பகுதியில் 2 மீட்டர் ஆழத்துக்கு வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், நகரமே நீரில் மூழ்கியுள்ளது. ஹுனான் மாகாணத்தில் 19 பேர் இறந்தனர், பின்னர் இந்த இறப்பு எண்ணிக்கை கூடி 90 ஆனது.
ஜியாங்ஸி மாகாணத்தில் மட்டும் 29,000 பேருக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். குயிஷூ மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மாகாணங்களும் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்டவையாகும். இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சீனாவின் 4 மாகாணங்கள் அங்கு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த வெள்ளத்துக்கு 50 பேர் பலியாகியுள்ளனர். 1,27,000 பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவாக 300 மி.மீ அளவுக்கு மழை பெய்ததால் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மின்சாரம், தொலைபேசித் தொடர்புகள் வெள்ளத்தினால் துண்டிக்கப் பட்டுள்ளன. கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாயின.ஆறுகளின் கரைகள் உடைந்து சுற்றுப்புறப் பகுதிகள் மூழ்கியுள்ளன. போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை 25 பேர் இறந்தனர். ஸியானிங் நகரத்தின் டாங்செங் பகுதியில் 2 மீட்டர் ஆழத்துக்கு வெள்ளம் சூழ்ந்து உள்ளதால், நகரமே நீரில் மூழ்கியுள்ளது. ஹுனான் மாகாணத்தில் 19 பேர் இறந்தனர், பின்னர் இந்த இறப்பு எண்ணிக்கை கூடி 90 ஆனது.
ஜியாங்ஸி மாகாணத்தில் மட்டும் 29,000 பேருக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். குயிஷூ மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மாகாணங்களும் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்டவையாகும். இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
No comments:
Post a Comment