Tuesday, December 20, 2011

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் ; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்.

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் நாளை (புதன்கிழமை) கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்காகன பக்தர்கள் திரள்வார்கள். இதனையொட்டி பக்தர்கள் வசதிக்காக காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பக்தர்கள் சிரமமின்றி சனிபகவானை தரிசிக்க தர்ம தரிசனம், ரூ.100 மற்றும் ரூ.300 கட்டணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நளன் குளத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் குளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே தற்காலிக உடை மாற்று மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சியையொட்டி இன்று இரவு 10 மணியளவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருள்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவுக்கு நாளை வரும் பக்தர்கள் வழிபட்டு செல்ல வசதியாக கோவிலின் வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.

நாளை இரவு சனீஸ்வரபகவான் மீண்டும் யாதாஸ் தானத்துக்கு செல்கிறார். அதோடு சனீஸ்வர பகவானுக்கு நாளை காலை 5 மணி முதல் நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திரவியப்படி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பெயர்ச்சியை குறிக்கும் வகையில் காலை 7.51 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவில் பகுதியில் 32 இடங்களிலும், நளன்குள பகுதியில் 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

வைகோவை தேடும் உளவுத்துறை : கூடலூருக்குள் ரகசியமாகச்சென்றாரா?



பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம்பம் பகுதிக்கு சென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் வைகோவின் செயல்பாடுகளை கடந்த நான்கு நாட்களாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கம்பத்தில் 144 தடையுத்தரவு தொடர்வதால், தேனியிலேயே வைகோவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், நேற்று நள்ளிரவு கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைகோ ரகசியமாக சென்றதாக தகவல் பரவியுள்ளது.

நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளை பார்வையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவையில் நடந்த பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்த குறும்பட சிடி வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

நேற்று தேனியில் கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் திடீரென தீக்குளித்தார். படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் அதன் பின்னர் வைகோ எங்கு சென்றார் என தெரியாததால் போலீஸ், உளவுத்துறை குழம்பி போய் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகோவின் உறவினர்கள், கட்சியினரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தபடி உள்ளனர்.

விரயம் ! - தினமணி தலையங்கம்.

உழலை அகற்ற வலுவான லோக்பால் மசோதா தேவை என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.

உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.

ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன. இந்த மெத்தனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.

ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது. இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.

மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகி விடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப் போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.

கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.

இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.

மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து. இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?

மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!

சசிகலா நீக்கம் : மொட்டை அடித்து அதிமுகவினர் மகிழ்ச்சி !



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தினர், நேற்று அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். இச்செய்தி வெளியாகியதும், திருப்பூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே கூடிய அ.தி.மு.க.,வினர் சிலர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிர்வாகிகள் ஒன்பது பேர் மொட்டை அடித்து பட்டாசு வெடித்தனர்; கட்சித் தொண்டர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மொட்டை அடித்திருந்தவர்கள் கூறுகையில், "எம்.ஜி.ஆர்.,காலத்தில் உண்மையான விசுவாசிகளுக்கு கட்சியில் மதிப்பு இருந்தது. முதல்வர் ஜெ., பொது செயலாளரானதும், சசிகலாவின் குடும்பம் அவரை சூழ்ந்து கொண்டது. யாருமே பொது செயலாளரை சந்தித்து பேச முடியாத, புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரதிநிதிகளை வைத்து, சசிகலா குடும்பம், கட்சியை கார்ப்பரேட் கம்பெனி போல் நடத்தி வந்தது.

சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதன் மூலமாக, கட்சியையும், முதல்வரையும் பிடித்திருந்த குடும்ப சனி விலகி விட்டது' என்றனர்.

கொலை வழக்கில் பணம் கைமாரியதால் காங். பிரமுகரை கைது செய்யயாமல் விட்ட சேலம் போலீஸ்.



சேலம் நகரில் உள்ள நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டராமன். இவர் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். தனது விசுவாசியான இவருக்கு பல்லவன் கிராம வங்கியின் இயக்குனாராகவும் ப.சிதம்பரம் பதவி வழங்கியிருந்தார்.

சேலத்தில் வளர்ந்து வரும் இந்த காங்கிரஸ் பிரமுகருக்கு கொடிகட்டுவது, தோரணம் கட்டுவது, வாழ்க கோசம் போடுவதற்காக சில எடுபுடிகள் எப்போதும் கூடவே வைத்திருப்பார்.

அப்படி இருந்த எடுபுடிகளில் ஒருவர் கரியபெருமால் கோவில் கரடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்கிற கார்த்திக். இந்த எடுபுடியை கடந்த 11ம் தேதி இரவு கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள எட்டி மாணிக்கம்பட்டி என்ற இடத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு சோளக்காட்டில் வைத்து யாரோ கொலை செய்துவிட்டனர்.

கொலை செய்யப்பட்டவரிடம் கிடந்த செல்போனை வைத்து விசாரணை செய்ததில், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வருன்கிருஷ்ணன் என்கிற விஜய் என்பவர் கொலையான அன்று பல தடவை கார்த்தியுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விஜய்யும், வெங்கட்டராமனின் இன்னொரு எடுபுடிதான், விஜயை பிடித்து விசாரணை செய்ததில், தானும், தன்னுடைய இன்னொரு நன்பரான கிச்சிப்பாளையம் குமார் என்கிற சிவக்குமாரும் சேர்ந்து தான் கார்த்தியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை செய்தபோது, எனக்கும் அவனுக்கும், வரவு செலவு பிரச்சனை.... என்று முதலில் சொல்லியுள்ளான், ஆனால் சிவக்குமாரின் வாக்குமூலம் வேறு மாதிரி இருந்துள்ளது.

இதற்கிடையில் கொலையானவன், கொலை செய்தவன் இருவருமே அந்த காங்கிரஸ் பிரமுகரின் ஆட்களாக இருந்தும் இரண்டு பக்கமுமே அந்த பிரமுகர் தலை காட்டவில்லை.

கொலைக்கு வேறு பலமான காரணம் இருக்கும் என்று சந்தேகம் கொண்ட போலீசார், கொஞ்சம் கடுமையாக விசாரிக்க, என்கிட்ட ஒருத்தன் பணம் வாங்கிக்கிட்டு ரொம்பநாளா திருப்பி குடுக்காம இழுத்து அடிக்கிறான், அவன்கிட்ட பணம் வாங்கிக்குடுன்னு நான் தான் கார்த்திகிட்ட சொன்னேன், அதுக்காக நாங்க மூன்று பேரும் போனப்பத்தான் அந்த சோளக்காட்டுல ஒண்ணா தண்ணியடிச்சோம். அப்ப எங்க அண்ணன் வெங்கட்டராமன் பொண்டாட்டி ராஜேஸ்வரிக்கும் அவருக்கு தெரிஞ்ச ஒரு பஸ் உரிமையாளர் மணிவாசகம் என்பவருக்கும் கள்ளக்காதல் இருக்குதுன்னு கார்த்தி என்கிட்ட சொன்னான்...., இவன் சொன்னத என்னால தங்கிக்க முடியல... எங்களுக்கு எல்லாம் தாயாக இருந்து சோறு போட்ட அண்ணியைபற்றி இவன் தப்ப பேசினது என்னால தாங்கமுடியலே... அதனாலதான், நான் அவனை கொலை செய்தேன் என்று சொல்லியுள்ளான்.

சரி, நீ யாருகிட்ட பணம் கொடுத்தே...? என்று போலீசார் போட்ட முதல் கொக்கிக்கு பதில் சொல்ல முடியவில்லை விஜய்யால். சரி.... நீயும் கார்த்தியும் பணம் வசூல் செய்ய போனவர்கள் எதுக்கு கத்தியெல்லாம் எடுத்து போனீங்க....? என்று போலீசார் கேட்டுள்ளனர்.

அதற்கும் விஜய்யால் பதில் சொல்ல முடியவில்லை. “அண்ணிக்கும், பஸ் ஒன்றுக்கும் கள்ளத்தொடர்பு என்ற போதே இதுக்கும் “அண்ணனுக்கும் தொடர்பு வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, முழு விசயத்தையும் சொல்லிவிட்டான் விஜய்.

அவனது வாக்குமூலம் எப்படியிருந்தது என்பதை நம்மிடம் சொன்ன போலீசார், அவ்வப்போது எங்களுக்கு எடுபுடி வேலைகள் கொடுக்கும் வெங்கட்டராமனின் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருப்போம்.

பல்லவன் கிராம வங்கியின் இயக்குனர் பதவியில் இருந்துகொண்டு சமீபகாலமாக அதிக வருமானம் பார்த்துவரும் வெங்கட்டராமனனின் மனைவி ராஜேஸ்வரிக்கும், மணிவாசகம் என்ற ஒரு பஸ் உரிமையாளர் ஒருவருக்கும் “கள்ளக்காதல் இருந்தது. இதை பலதடவை நாங்க பாத்திருக்கிறோம்.

வெங்கட்டராமன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த கார்த்தி அண்ணன் “மனைவியும் “மணிவாசகாவும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து விட்டேன் என்றும், “அண்ணா நீங்க கொஞ்சம் இந்த விஷயத்தை கவனமாபாருங்க இல்லையின்னா உங்க “மானம் போயிரும் என்று வெங்கட்டராமனிடம் சொல்லியிருக்கிறான்.

அப்படியா நடக்குது...? என்று ஆச்சரியப்பட்ட வெங்கட்டராமன் “சரி இதை எங்கயும் வெளியில சொல்லாதே... என்று கொஞ்சம் “கரன்சியை கார்த்தியின் கையில் கொடுத்துவிட்டு போகிறார்.

ஒகோ... “இதுக்கெல்லாம் பணம் கொடுப்பாங்க போல என்று ருசி கண்ட கார்த்தி, கொஞ்ச நாளுக்கு பின்னர் தனக்கு இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரிடம் போய் கேட்டுள்ளான். பலதடவை அப்படி கொடுத்துள்ளார்.

கார்த்தி மீண்டும்... மீண்டும்.... பணம் கேட்டு தொல்லை கொடுக்க.... “நீ கேட்டப்பவேல்லாம் நான் பணம் குடுக்க முடியாது... நீ வேண்ணா எம்பொண்டாட்டிக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்குதுன்னு ஊருக்குள்ள போய் சொல்லு...., யாரும் நம்பமாட்டங்க.... என்று சொல்லிவிட்டார் வெங்கட்டராமன்.

அப்ப நான், என் வேலைய பார்த்துக்கிறேன், அந்த போட்டோவை ஒரு பிரின்டு போட்டு ஊர்பூராவும் நான் போஸ்டர் அடிச்சி ஓட்டப்போறேன்.... என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளான் கார்த்தி.

“போஸ்டர் அடிச்சு ஒட்டப்போறேன் என்று சொன்னதும் பதறிப்போன வெங்கட்டராமன் “டேய் என்னடா சொல்லறே...? என்று கொஞ்சம் இறங்கி வந்து கேட்டுள்ளார், ஆமானா “நீ சும்மா காசு குடுப்பியாண்ணா...? அதனால தான் நான் எல்லாத்தையும் “வீடியோ போட்டோவெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன் என்று சொல்லியுள்ளான் கார்த்தி.

இப்போதைக்கு இதை வச்சுக்கோ.... என்று கொஞ்சம் பணத்தை கார்த்தியிடம் கொடுத்துவிட்டு, இதற்கு ஒருவழியில் முடிவுகட்ட விரும்பிய வெங்கட்டராமன், தனது இன்னொரு எடுபுடியான விஜயிடம் சொல்லி கார்த்திக்கு “முடிவு கட்டச்சொல்லியுள்ளார்.

அதன்படி, விஜய் தன்னுடைய நண்பரான கிச்சிப்பாளையம் சிவக்குமார் என்பவரை கூட சேர்த்துக்கொண்டு கார்த்தியை கூப்பிட்டு எனக்கு ஒருவன் பணம் கொடுக்க வேண்டும், அதை என்னால் வாங்கமுடியவில்லை.... நீ வந்தால் தான் அவன் எனக்கு கொடுப்பான் என்று சொல்லி ஒருவாரமாக மூவரும் தினமும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடித்துள்ளனர்.

கார்த்தி, விஜயை முழுமையாக நம்ம்பிய பின்னர், அவனை கூட்டிப்போய் சோளக்காட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். அப்போது கார்த்தியை, வெங்கட்டராமனின் மனைவி ராஜேஸ்வரிக்கும் பஸ் ஓனருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொன்னதையும், அதை சொல்லச்சொல்லி சிவக்குமார் மிரட்டுவதையும் கார்த்தியை குத்தி கொலை செய்தபோது சோளக்காட்டுக்குள் நடந்ததையெல்லாம் விஜய் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து வைத்துள்ளான்.

அதுவுமில்லாமல், கொலை செய்தபின்னர் போன் செய்து வெங்கட்டராமனிடம் பேசியது போன்ற எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, இந்த ஆதாரத்தை வைத்து பின்னர் வெங்கட்டராமனிடம் மிரட்டி பணம் வாங்க இவன் திட்டமிட்டுள்ளான்.

அந்த செல்போனில் பதிவு செய்யப்படிருப்பதையும் கைப்பற்றிய கொண்டலாம்பட்டி போலீசார் வெங்கட்டராமனை கைது செய்ய முடிவு செய்திருந்த நேரத்தில், இந்த தகவல், மல்லூர் காவல் நிலையத்தில் புரோக்கராக இருக்கும் தபால்காரர் தனபால் என்பவருக்கு தெரிந்துள்ளது. சேலம் மாவட்ட போலிஸ் டிபார்ட்மென்டில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளவர் இந்த தபால்காரர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பல உயர் அதிகரிகளுக்கு இந்த தனபால்தான் இடமாறுதல் உத்தரவு வாகிக்கொடுப்பவர், இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளா தனபால் நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வார்.

காங்கிரஸ் கட்சியில் நல்ல செல்வாக்கில் இருக்கும் வேங்கட்டராமனை போலீசார் தூக்கப்போவது தெரிந்தது, நேராக வெங்கட்டராமனிடம் போய் டீல் பேசி.... இந்த விசயத்தை “கமுக்கமாக” முடிக்க 40 லட்சத்தை வாங்கிக்கொண்டு வந்து “பரமசிவனின்” பெயரை கொண்ட சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளருக்கும், “தாய்மொழி”யின் செல்வனான ரூரல் துணை கண்காணிப்பாளருக்கும் இருபத்தி ஐந்து லட்சங்களை வாரி இரைத்து விட்டு மீதியை அமுக்கிக்கொண்டார் தனபால்.

உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து கொடுத்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீசார், மற்றும் சில அதிகாரிகள் இப்போது அந்த காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு கூட போடமுடியாமல் உள்ளனர்.

தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் சில நல்ல உள்ளம கொண்ட உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ளார்கள். இந்த விபரங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர் களுக்கும் தெரிந்துவிட்டதால் இப்போது வெங்கட்டராமன் மீது என்ன வழக்கு போடலாம் என்று ஆலோசனை நடத்திவருகிறார்கள் சேலம் மாவட்ட போலிஸ் அதிகாரிகள்.

நன்றி - நக்கீரன்

அமைச்சரவையில் இருக்கும் சசிகலா கும்பலின் பட்டியல். இவர்கள் வெளியேற்றப்படுவர்களா?



சசிகலா உள்பட 14 பேர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, இன்னும் தமிழக அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் 15பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் சசிகலாவின் கோஷ்டி என்பதால் இவர்களின் நிலை என்னவாகும் என்பது கேள்வியாக உள்ளது. பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சரவையில் இருக்கும் சசிகலா கும்பலின் பட்டியல்.

செந்தில் பாலாஜி,

பச்சைமால்,

நத்தம் விஸ்வநாதன்,

டாக்டர் விஜய்,

வைத்தியலிங்கம்,

கோகுல இந்திரா,

பழனியப்பன்,

வளர்மதி,

ஆனந்தன்,

ஜெயபால்,

செந்தூர்பாண்டியன்,

எடப்பாடி பழனிச்சாமி,

காமராஜ்,

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

செல்வராஜ்

ஆகியோர் உட்பட ஏராளமான அமைச்சர்களின், இலாகாகளில் மாற்றம் ஏற்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சசிகலா வெளியேற்றப்பட்டதில் சோவின் பங்கு.



சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கு கடந்த சில வாரங்களாகவே ஜெயலலிதாவுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. அவையெல்லாம் அதிகாரம் மற்றும் சதி தொடர்பான காரணங்கள். அரசியல் ரீதியான காரணங்கள் அல்ல. ஆனால், அரசியல் ரீதியாக சசிகலாவை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று கடந்த வார இறுதியில்தான் அவருக்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

“தேசிய அரசியலில் நீங்கள் இறங்கும் யோசனை இருந்தால், சசிகலாவை இப்போதாவது கழட்டி விடுவதைத் தவிர வேறு வழி கிடையாது” என்ற ரீதியில் இருந்தது அந்த அட்வைஸ்.

கடந்த வார இறுதியில் போயஸ் கார்டனில் நடைபெற்ற ஒரு சந்திப்புதான் சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கான அரசியல் பக்கத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெளிவாகக் காட்டியது. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தவர் பத்திரிகையாளரும், சில அரசியல் விஷயங்களில் ஜெயலலிதாவின் ஆலோசகருமான சோ.

அதன் பின்னரே சசிகலாவை வெளியேற்றும் இறுதி முடிவை அரசியல் ரீதியாக எடுப்பதற்கு ஜெயலலிதா தயாரானார்.

சோ இந்தச் சந்திப்புக்கு செல்வதற்குமுன், சில பின்னணி சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.

சென்னையில் தலைமுறைகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு நிறுவனத்திடமே சசிகலா தரப்பு இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு டீல் பேச முயன்றது. அவர்களது பரம்பரை வர்த்தகத்தை இனியும் தமிழகத்தில் தொடர்வது என்றால், அவர்களது நிறுவனத்தின் ஆபரேஷனல் சப்சிடரியாக இயங்கும் மற்றொரு நிறுவனத்தை தமக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்பதே டீலின் சாராம்சம்.

பெரிய நிறுவனம் இந்த மிரட்டலுக்கெல்லாம் பணியத் தயாராக இல்லை. ஆனால், குறிப்பிட்ட பெரிய நிறுவனத்தின் இளைய தலைமுறை தலைமையால் இந்த அழுத்தத்தை சரியாக டீல் பண்ணவும் முடியவில்லை. நிறுவனத்தின் இளைய தலைமுறை, அவர்களின் லீகல் விவகாரங்களைக் கவனிக்கும் மற்றொரு பாரம்பரியம் மிக்க சட்ட நிறுவனத்திடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார்.

அந்த சட்ட நிறுவனம் சென்னையில் உள்ள வேறு பெரிய நிறுவனங்களுக்கும் -இந்திய சினிமா இசை வர்த்தகத்தில் கால்பதித்துள்ள வெளிநாட்டு நிறுவனம் உட்பட- லீகல் கன்சல்டேஷன் செய்யும் குரூப். அவர்களிடம் ஏற்கனவே இதே போன்ற மிரட்டல் தொடர்பாக வேறு நிறுவனங்களிடமிருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டிருந்தன. எல்லாமே இம்முறை அ.தி.மு.க. அரசு அமைந்தபின் வந்த மிரட்டல்கள்தான்!

இந்த விபரங்கள், கடைசியாக ஆலோசனைக்கு வந்த நிறுவனத்திடம் சொல்லப்பட, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மற்றைய நிறுவனங்களின் தலைமைகளுடன் இது தொடர்பாக கலந்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது. சட்ட நிறுவனத்தில் இருந்தே மற்றைய நிறுவனங்களுக்கு போன் செய்யப்பட்டு இது தொடர்பாக பேசப்பட்டது.

நவம்பர் மாத இறுதியில், சென்னையின் முக்கிய தொழிலதிபர்கள் சிலர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சென்னையில் அமைந்துள்ள கிளப் ஒன்றில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விஷயத்தை தமிழக முதல்வரிடம் கொண்டுசெல்ல லாபி குரூப் ஒன்று உருவாகியது.

இதுவரைக்கும் சரி. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது? இதில் சிக்கல் ஏற்படுத்தும் பார்ட்டி, சசிகலா குரூப் என்பதால், தற்போது சென்னையில் பெரியளவில் வர்த்தகம் நடந்து கொண்டுள்ள தொழிலதிபர்கள் தயங்கினார்கள். விஷயம் சசிகலா காதுக்கு போனால், தமது நிறுவனங்களுக்கு தேவையில்லாத சிக்கல் வந்துகேரும் என்ற பயம் அவர்களுக்கு.

இந்தளவுக்கு டெவலப்மென்ட் நடந்த பின்னர், நாம் முதலில் குறிப்பிட்ட சட்ட நிறுவனம் கொடுத்த அட்வைஸ்தான், சோவை தொடர்பு கொள்ளலாமே என்பது. விஷயம் சரியானதாக இருந்தால், அதை தைரியமாக ஜெயலலிதா வரை கொண்டுசெல்ல சரியான நபர் அவர்தான் என முடிவாகியது. தொழிலதிபர்களில் லாபி குரூப் சோவுடன் பேசியது. தம்மிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் காட்டினார்கள்.

அதன்பின் சோ, ஜெயலலிதாவை தொடர்புகொண்டு சந்திப்புக்கு நேரம் கேட்டார். கடந்த வார இறுதியில் சந்திப்பு நடந்தது.

இதற்கிடையே சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரும் ஜெயலலிதா தொடர்பாக சில விஷயங்களை சோவுடன் விவாதித்திருந்தார். ஜெயலலிதா தேசிய அரசியலுக்குள் வருவது தொடர்பாகவும், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டு தொடர்பாகவும் அப்போது பேசப்பட்டது. அந்த விஷயங்களை ஜெயலலிதாவரை கொண்டு செல்லும் பொறுப்பும் சோவிடம் பா.ஜ.க. தலைவரால் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வார இறுதியில் ஜெயலலிதாவைச் சந்தித்த சோ, அவரைச் சுற்றி நடக்கும் சசிகலா குரூப் விவகாரங்களை ஜெயலலிதாவுக்கு விளக்கமாகக் கூறியபோது, ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம் கலந்த கோபம் ஏற்பட்டது. ஆச்சரியத்துக்கு காரணம், இவை எதுவுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

“எம்.ஜி.ஆர். காலத்துக்குப்பின் இம்முறை உங்களை அமோகமாக வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லையா? இன்னமும் ஒன்றரை வருடங்களில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படியொரு வெற்றி கிடைத்தால், தேசிய அரசியலில் நீங்கள் எங்கே போக முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா? அவற்றையெல்லாம், உங்களைச் சுற்றி இருப்பவர்களால் கெடுத்துக் கொள்ளப் போகிறீர்களா?” என்று இறுதியில் சோ கேட்டாராம்.

“நான் கடுமையான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே” என்று ஜெயலலிதா இறுகிய முகத்துடன் கேட்டாராம்.

அதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சோ கூறியபோது, ஜெயலலிதா மரியாதை நிமித்தம் அவரை வணங்கி, “வெளியேற்ற வேண்டியவர்கள் இன்னமும் ஒரு வாரத்துக்குள் வெளியேற்றப்படுவார்கள்” என்றாராம்.

நன்றி - விறுவிறுப்பு.காம்.