Thursday, May 5, 2011

வெள்ளோடு சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள்.


ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெளிநாட்டு பறவைகள் அக்டோபரில் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து மார்ச்சில் சொந்த நாடுகளுக்குச் சென்று விடும்.

கொசு உள்ளான், கூழக் கடா, நெடுங்கால் உள்ளான், வண்ண நாரை, வெள்ளை அரிவாள்மூக் கன் போன்ற வெளிநாட்டு பறவைகள் வந்து, மீண்டும் திரும்பிச் சென்று விடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் 93 வகைகளை சேர்ந்த 31 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டன. பாம்புதாரா, நீர் காகம், பெரிய நீர்காகம், உண்ணி கொக்கு, நீளவால் இலைக் கோழி, நாமக்கோழி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி மற்றும் பல்வேறு வகை சிட்டுக்குருவி ரக பறவைகள் தான் இங்கேயே நிரந்தரமாக தங்கி இருக்கின்றன.

நீர் காகம், கொக்கு வகைகள் காலையில் கிளம்பிச் சென்று மாலையில் மீண்டும் அங்கு வந்து விடுகின்றன. ராக்கொக்கு பறவைகள் மாலையில் வெளியேறி அதிகாலை சரணாலயம் திரும்புகிறது. பறவைகளை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணிக்கு அல்லது மாலை 5 மணியில் இருந்து 6.30க்குள் வந்தால் அனைத்து வகை பறவைகளையும் பார்க்க முடியும்.

பறவைகளை காண வனத்துறை சார்பில் தொலைநோக்கி கருவி, பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர் சிறுமிகள் பெற்றோருடன் வந்து செல்கின்றனர். அவர்கள் பகல் நேரத்தில் வருவதால் அரியவகை பறவைகளை காண வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. மாலை நேரத்தில் 6.30 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.

சுற்றிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளதால் தற்போது சரணாலயம் மரங்கள் பூத்து குலுங்கும் சோலையாகக் காட்சி தருகிறது.

அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா ! இதுவரை வெளிவராத படம் !

நக்கீரன் வெளியிட்ட படம்.









பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திக் கொன்றது. கொல்லப்பட்ட ஒசாமாவின் புகைப்படத்தை வெளியிடுவதில்லை என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், கொல்லப்பட்டது ஒசாமாதான் என்பதை ராணுவத்தின் அடையாளம் காணும் புகைப்படம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை!



தமிழக சட்டபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தனர்.

இந்த பிரசாரத்தின்போது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டது.

தி.மு.க. தேர்தல் குழு உறுப்பினர்கள் பொன். முத்துராமலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த புகார் மனுவை கொடுத்தனர்.

இதுபோல், “துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது அ.தி. மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மனோஜ்பாண்டியன் எம்.பி. தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார்.

பேச்சு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, 3 பேரும் தேர்தல் கமிஷனுக்கு விளக்க கடிதம் அனுப்பினார்கள். அதில், “அரசியல் தொடர்பாகவே பேசியதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்கவில்லை” என்றும் கூறி இருந்தனர். இந்த விளக்க கடிதங்கள் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய தேர்தல் கமிஷனர் குரேசி, தேர்தல் அதிகாரிகள் சம்பத், பிரம்மா ஆகியோர் 3 தலைவர்களும் அளித்துள்ள விளக்க கடிதங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டனர்.

அதை தொடர்ந்து, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்ட தனிப்பட்ட விமர்சன புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று முடிவு செய்தனர்.


தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை குஷ்புவுக்கு தேனி போலீசார் சம்மன்/


தேனி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் விதிமுறையை மீறியதாக 260 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. இதில் 210 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 40 வழக்குகள் விசாரணையில் உள்ளது. மீதமுள்ள 10 வழக்குகளுக்கு தண்டணை பெறப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் அனைத்தும் போலீஸ் நிலைய ஜாமீனில் வெளிவரக்கூடியவை என்பதால் கைது செய்து ஜாமீனில் போலீசார் விட்டுள்ளனர்.

நடிகை குஷ்பு தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும், தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் பழனிசெட்டிபட்டி மற்றும் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

குஷ்பு வெளியூரை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தேனி மாவட்ட போலீசார் சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நடிகை குஷ்பு தேனி போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.11 லட்சம் ; தேர்தல் கமிஷன் அறிவிப்பு.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.11 லட்சம்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் தபால் ஓட்டுகளுக்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 580 வாக்குச்சீட்டுகளை தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளை `சர்வீஸ்' வாக்காளர்கள், `நான்-சர்வீஸ்' வாக்காளர்கள் மற்றும் தடுப்புக்காவல் கைதிகள் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது.

தேர்தல் கமிஷன் அளித்துள்ள வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கையின் (மாவட்ட வாரியான) விபரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம்-7,455 வாக்குச்சீட்டுகள், சென்னை-6,453, காஞ்சீபுரம்-5,236, வேலூர்-18 ஆயிரத்து 941, கிருஷ்ணகிரி-7,286, தர்மபுரி-4,870, திருவண்ணாமலை-10ஆயிரத்து 674, விழுப்புரம்-10ஆயிரத்து 146, சேலம்-9,383, நாமக்கல்-5,548, ஈரோடு-4,855, நீலகிரி-3,400, கோவை-6,630, திண்டுக்கல்-7,025, கரூர்-3,276, திருச்சி-7,464 பெரம்பலூர்-2,011, கடலூர்-6,485, நாகை-4,927, திருவாரூர்-4,195, தஞ்சாவூர்-7,457, புதுக்கோட்டை-4,424, சிவகங்கை-4,164, மதுரை-12 ஆயிரத்து 176, தேனி-7,453, விருதுநகர்-2,438, ராமநாதபுரம்-3,988, தூத்துக்குடி-5,558, நெல்லை-10 ஆயிரத்து 114, கன்னியாகுமரி-10ஆயிரத்து 512, அரியலூர்-2,359, திருப்பூர்-4,675.

தடுப்புக் காவல் கைதிகள் 51 பேருக்கு தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் தமிழகத்துக்கு தபால் ஓட்டுக்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 580 வாக்குச்சீட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மு.க.அழகிரி மீதான வழக்கை போலீசார் விசாரிக்க இடைக்கால தடை ; மதுரை ஐகோர்ட்டு.

மு.க.அழகிரி மீதான வழக்கை போலீசார் விசாரிக்க இடைக்கால தடை; மதுரை ஐகோர்ட்டு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரி கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி மேலூர் அம்பலக்காரன்பட்டியில் உள்ள வல்லடிக்காரர் கோவிலுக்கு வந்தார்.

அப்போது தாசில்தாராக இருந்த காளிமுத்துவுடன் வந்த தேர்தல் வீடியோகிராபர் கண்ணன் படம் எடுக்க முயன்றார். இதைப் பார்த்ததும் படம் எடுக்கக்கூடாது என்று கூறி தி.மு.க.வினர் வீடியோகிராபரிடம் இருந்து கேமராவை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாக மு.க.அழகிரி மீது புகார் கொடுத்ததாகவும், ஏற்கனவே புகாரில் கூறி உள்ளது போன்று சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் காளிமுத்து தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினார். அதன்பின்பு காளிமுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் காளிமுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாகமே மு.க.அழகிரி மீது புகார் கொடுத்தேன். நான் கொடுத்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம், தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என்னை சிலர் மிரட்டியதால் புகாரை வாபஸ் வாங்கினேன் என்று 22.4.2011 அன்று போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தங்கள் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதை அறிந்தேன். அப்போது என்னையும் அந்த வழக்கில் சேர்த்து விசாரிக்கும்படி மனு தாக்கல் செய்தேன். மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, புகாரில் உண்மை இல்லை என்றால் புகார் தவறு என்று கூறி போலீசாரே வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

ஆனால் கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கை திறந்த மனதுடன் விசாரிக்க விரும்பவில்லை. அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். தொடர்ந்து அவர் இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை உண்மையான கோணத்தில் செல்லாது. போலீஸ் சூப்பிரண்டு தனது செல்வாக்கை இந்த வழக்கில் பயன்படுத்த முயல்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் உயர் அதிகாரிகளுக்கு பயந்து செயல்படுவது போல் உள்ளது. மதுரையில் இருக்கும் போலீஸ் படை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்த வழக்கை மதுரை மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை சேர்ந்த நடுநிலையோடு செயல்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி துரைச்சாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சீனிவாசனும், அரசு தரப்பில் வக்கீல் இளங்கோவும் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி, மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வருகிற 19-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.

ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மக்கள் வரியாக செலுத்தும் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது.

எனவே ஊழலை ஒழிக்க வேண்டும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும்.

கறுப்பு பணத்தை வைத்திருப்போர் மீது தேச துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்து, வரும் ஜுன் மாதம் 4-ந் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

எங்களுடைய இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.